நாமக்கல் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில், பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், ஈரோடு மக்க ளவை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் விஜயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வரும் ஏப்.19 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக உள் ளிட்ட கட்சியினர் தேர்தல் பணிகளை விறுவி றுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நி லையில், பாஜக கூட்டணி கட்சியினர் மந்த மான நிலையிலேயே தற்போது வரை தேர் தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்ற னர். நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை பாஜக வேட்பாளர் கே.பி. ராமலிங்கம் தொகுதி முழுக்க அறிமுகமான நபர் என்றாலும், பாஜக பலவீனமான கட்ட மைப்பு உள்ள தொகுதி என்பதாலும், போதிய அளவிலான கூட்டணி கட்சிகள் இல்லாததா லும் ஏனோ தானோ என்று பாஜகவினர் தேர் தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின் றனர். ஈரோடு தொகுதியை பொருத்தவரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெ ரிய அளவிலான நட்சத்திர அரசியல்வா திகளோ, கட்சி பலமும் இல்லாததால், தொகு தியின் ஒரு சில பகுதிகளில் உள்ள கிளை அளவில் வட்டார அளவில் செயல்படும் பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் பிரச்சா ரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவினர்
தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து ஈரோடு தொகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்த தேர்த லில் பாஜக கூட்டணியில் பாமக சேர்ந் ததை தற்போது வரை பெரும்பாலான தொண் டர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலை உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் உற்சாக மாக பணியாற்றும் பாமகவினர், முன் எப்போ தும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறோம் என் கிற அறிவிப்பு வந்ததிலிருந்து சோர்வ டைந்து விட்டனர். கூட்டணி கட்சியாக இருக் கக்கூடிய பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆட்கள் இல்லாத நிலையில் அவர் களை நாங்கள் அழைத்துச் சென்று வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. களமும் எங்களுக்கு சாதகமாக இல்லா ததால், சமீப காலமாக நாங்கள் தேர்தல் பிரச் சாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டோம். கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் ஏன் நீங்கள் வரவில்லை என்றும் கேட்பதில்லை. அவர்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்தி ருக்கிறது. எப்படியும் இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தமிழ கத்தில் வெற்றி பெறப்போவதில்லை என தெரிந்தே ஏனோ தானோ என்று தேர்தல் பிரச் சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட் டுமே முழுமையாக உள்ள நிலையில் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணி கள் இருந்தாலும், அதுகுறித்து இதுவரை யிலும் கூட்டணி கட்சியிலிருந்து யாரும் பேச வில்லை. நாங்களும் எங்கள் வேலையை பார்த்து வருகிறோம். மேலும், பாஜக கூட்ட ணியில் பாமக இணைந்த நாள் முதலே உள் ளூர், மாவட்ட அளவில் கட்சிக்குள் நிறைய பிரச்சனைகள் உருவாகியுள்ளது. முறை யாக கூட்டணிக் கட்சியினரை அழைப்பதில்லை என பாமக நிர்வாகிகள் எங்களிடம் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர். எது எப் படியோ இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந் தால் போதும் என்ற நிலைக்கு வந்துள் ளோம். தேர்தல் முடிவுக்கு பிறகு மருத்து வர் ஐயா மிகப்பெரிய தவறை செய்துவிட் டோம் என கண்டிப்பாக உணர்வார். வாட்ஸ் ஆப் குழுவில் பாமக நிர்வாகிகள், கட்சி நிர்வா கிகள் மத்தியில் இதுகுறித்து தங்களுடைய மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின் றனர். இவ்வாறு தனது ஆதங்கத்தை பொழிந் துள்ளார்.