நாமக்கல், ஜன.7- சட்டப்பேரவையை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டப்பேரவை திங்களன்று காலை கூடிய நிலை யில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் வெளியேறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாட்டு மக் களின் கோபத்தை திசைமாற்ற வித்தைகளைச் செய்யும் அதி முக - பாஜக கள்ளக் கூட்டணியை கண்டித்தும், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, உதகை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.