districts

img

திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

கோபி, செப்.1- கோபி அருகே உள்ள சிறுவலூரில் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபி தெற்கு ஒன்றிய திமுக  சார்பில் சிறுவலூர் தனியார் திருமண மண்டபத்தில் பொது உறுப்பினர்கள் கூட்டம், அவைத்தலைவர் மாரி யப்பன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலா ளர் எஸ்.ஏ.முருகன் வரவேற்றார். மாவட்டச் செயலா ளர் என். நல்லசிவம் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத் தில், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 இடங்களை  பிடிக்க கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளை திமுக வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்தும், திமுக வின் வெற்றிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணி யாற்ற வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. இதில்,  மாநில மகளிரணி நிர்வாகி காயத்திரி, மாவட்ட சுற்றுச் சூழல் அணி அமைப்பாளர் கே.கே.செல்வம், துணை அமைப்பாளர் கைலாஷ்குமார், மாவட்ட பிரதிநிதி சீனி வாசன், இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத் குமார், ஒன்றிய அமைப்பாளர் கதிர்வேல், விவசாயத் தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கணே சன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் கோதண்டபாணி,  மூர்த்தி, அமரவாதி நாரயணன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.