சேலம், ஏப்.7- வாழப்பாடி பகுதியில், கள்ளக்கு றிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். கள்ளக்குறிச்சி மக்களவை தொகு தியில் இந்தியா கூட்டணி சார்பில் போட் டியிடும் திமுக வேட்பாளர் மலைய ரசன் தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட் டம், வாழப்பாடி பகுதியில் வாக்குசே கரிப்பில் ஈடுபட்டார். சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் தலைமையில், வாழப்பாடி வடக்கு ஒன்றியச் திமுக செயலாளர் எஸ். சி.சக்கரவர்த்தி, ஏற்காடு தொகுதி பொறுப்பாளர் கருணாநிதி, மேற்பார் வையாளர் பெருமாள், ஏற்காடு முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல் வன் ஆகியோர் முன்னிலையில் மலை யரசன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், தமிழ்நாடு முதல் வர் மக்களுக்கு செய்த நலத்திட்டங்க ளையும், காங்கிரஸ் அறிவித்துள்ள தேர் தல் அறிக்கையின் சிறப்பம்சங்களை யும் எடுத்துக்கூறினார். முன்னதாக, ராஜாபட்டணம், கோளாது கோம்பை, நீர்முள்ளிகுட்டை, சந்திரபிள்ளை வலசு, சின்ன நாயக்கன் பாளையம், பள்ளத்தாதனூர், குறிச்சி, புழுதிகுட்டை, அத்தனூர், பேளூர் உட் பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்கள் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.