கோவை, ஏப்.10 இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிர பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகின் றார். கோவை வடக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட லிங்கனூர், பெரிய தோட்டம் காலனி, திம்மையா நகர், வீரகேரளம், சுண்டப்பாளை யம், ஓணாம்பாளையம் பகு திகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய வேட்பாளர் கணபதி ராஜ்குமார்;- கோவை மக்களுக்கும், கோவையின் தொழில் வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங் களை திமுக கொண்டு வந்துள்ளது. இன்னும் அற்புதமான திட்டங்கள் மூலம் கோவை பல்வேறு வளர்ச்சியை காண உள் ளது. செம்மொழி மாநாட்டின்போது கோவைக்கு சர்வதேச தரத்திலான செம் மொழி பூங்கா, திட்ட சாலைகள் என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஒன்றியத்தில் ஒருமித்த கருத்துடைய ஆட்சி அமையும் பட்சத்தில் ஒன்றிய அரசிடம் இருந்து நிதிகளை பெற்று இன்னும் பல திட்டங்கள் கொண்டு வர முடியும். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சாரத்தின்போது, இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.