உடுமலை, பிப்.22- உடுமலை மற்றும் மடத்துகுளம் தாலுகா பகுதியில் உள்ள ஐந்து பேரூராட்சிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றது. உடுமலை தாலுகா தளி பேரூராட்சியில் மொத்தமுள்ள 17 வார்டுகளில் திமுக 10 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி 1 வார்டிலும், அதிமுக 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 10 வார்டுகளிலும், அமுமுக 3 வார்டு களிலும், அதிமுக 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சங்கரமநல்லூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 8 வார்டுகளிலும், மதிமுக 2 வார்டு களிலும், அதிமுக 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுவுள்ளது. மடத்துக்குளம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக 13 வார்டுகளிலும், அதிமுக 3 வார்டுகளிலும், 2 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். கனியூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 9 வார்டு களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், அதிமுக 2 வார்டுகளி லும், 2 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் மொத்தமுள்ள ஜந்து பேரூ ராட்சிகளிலும் அதிக பெருமான்மையுடன் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற் றுள்ளது.