நாமக்கல், ஜூலை 9- இடைநிலை தொடக்கநிலை ஆசிரியர்களின் ஊதிய அநீதி கலை யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் டிட்டோஜாக் அமைப் பினர் திங்களன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவிகித ஆசிரியர்களை பாதிக்கும், அர சாணை எண் 243 ஐ முற்றாக ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகள் பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு வரையில் நிறுத்தி வைத்திட வேண்டும். இடை நிலை தொடக்கநிலை ஆசிரி யர்களின் ஊதிய அநீதி கலையப்பட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய் வூதி திட்டம் மீண்டும் கொண்டு வரப் பட வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் ஆர்ப்பாட்டம் நடத்த டிட்டோ ஜாக் அமைப்பு அறைகூவல் விடுத் துள்ளது. இதன்ஒருபகுதியாக, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் கண்டிப் புதூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் நிர்வாகிகள் சுப்பிரம ணியம், பிரபு ஆகியோர் தலைமை ஏற்றனர். இதில், தமிழ்நாடு ஆசிரி யர் மன்றத் தலைவர் கண்ணன், தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் நாராயணன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர் சேகர் ஆகியோர் உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்றனர். கலந்து கொண்டவர் கள் கோஷங்களை எழுப்பினர்.