districts

img

பத்திரப்பதிவு செய்யாமல் இழுத்தடிப்பு: வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

தருமபுரி, மே 17- அரசு வழங்கிய மனை இடத்தில் பத்திரப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வரு வதை கண்டித்து அன்னசாகரம் மக்கள் தரும புரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். தருமபுரி நகராட்சிக்குட்பட்டது அன்னசா கரம். கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அப் பகுதியில் உள்ள மக்களுக்கு, அரசு இலவச வீட்டுமனைகள் வழங்கியுள்ளது. இதில் அந்த மக்கள் வீடு கட்டி, பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அதே  பகுதியைச் சார்ந்த தனிநபர்கள் சிலர் கோயில் நிலம் முழுவதையும், ஆக்கிரமிப்பு செய்து  கட்டிடங்களை கட்டி வந்துள்ளனர். மேலும்,  போலியாக ஆவணங்களை தயாரித்து உள்ள னர். ஆனால், அரசு வழங்கிய இடத்தில் வீடு  கட்டி வசித்து வரும் கிராம மக்களை, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, போலியாக பட்டா பெற்றுள்ளதாக பல்வேறு அலுவல கங்களில் மனு கொடுத்துள்ளனர்.

இதனால் தருமபுரி பத்திரப் பதிவு அலுவலகத்தில் அன்னசாகரம் பகுதி குடியிருப்புகளின் பத்தி ரப்பதிவினை தற்காலிக நிறுத்தி வைத்துள்ள னர். இதனைத்தொடர்ந்து, கடந்து சில மாதங் களுக்கு  முன்பு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் விசாரணை செய்து, இந்த இடம் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட இடம். அரசு வழங்கியது தான் என அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். மேலும், அன்னசாகரம் குடியிருப்புகளில் பத்திர பதிவுக்கு தடை யில்லை என மாவட்ட வருவாய் அலுவலர் அறிக்கை கொடுத்துள்ளார். இதனைத்தொ டர்ந்து கடந்த 6 மாதமாக பத்திரப் பதிவு அலு வலகத்திற்கு பொதுமக்கள் சென்று வரு கின்றனர். ஆனால் பதிவு செய்து தராமல், அலைக்கழித்து வந்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் தருமபுரி வட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைய டுத்து, வருவாய் கோட்டாட்சியர் கீதா ராணி,  வட்டாட்சியர் ஜெயவர்தன், மாவட்ட துணை  காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் காவல் ஆய்வாளர் ரங்கசாமி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அனைத்து மக்களுக்கு விரைவில் பத்திரப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் அடிப்படையில் போராட் டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.