districts

img

மாவட்ட பாலர் பூங்கா அமைப்பு

சேலம், அக்.15- சேலம் மாவட்ட பாலர் பூங்கா அமைப்பு பேரவைக் கூட்டத் தில், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சேலம் மாவட்ட பாலர் பூங்கா அமைப்பு பேரவைக் கூட்டம், ஜலகண்டபுரம் - காட்டம் பட்டி மினர்வா மெட்ரிக்குலேசன் பள்ளியில் அண்மையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ராஜாத்தி தலைமையில் நடைபெற்றது. நங்கவள்ளி பாலர் பூங்கா குழந்தைகள் வரவேற்றனர். தமுஎகச நிர்வாகி எஸ்.வசந்தி பாடல் பாடி துவக்கி வைத்தார். மினர்வா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் டி.ஜெய முருகன், வி.ராமமூர்த்தி, எம்.பாண்டியன் ஆகியோர் “எப்படி பல விவரங்களை நினைவில் நிறுத்திக் கொள்வது”, காகித மடிப்பு கலை, “சிந்திப்போம் செயலாற்றுவோம்”, “ஏன்? எதற்கு? எதனாலே?” என்ற கேள்விக்கு அறிவியல் பூர்வமாக விடை தேடுவோம் ஆகிய கருத்துகளைப் பாடலின் மூலம் தெளிவுபடுத்தினர். தொடர்ந்து பனங்காட்டூர் பள்ளி குழந்தை களின் நடனம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. மினர்வா மெட்ரிக் பள்ளி சேர்மேன் கே.எம்.மல்லன், நிகழ்ச்சி ஏற்பாடு பாலர் பூங்கா மாநில, மாவட்ட நிர்வாகிகளைக் கௌர வித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் மேவை.சண்முகராஜா வாழ்த்திப் பேசினார். இதைத்தொடர்ந்து பாலர் பூங்கா மாவட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களாக கே.ராஜாத்தி, கே.ஜோதி லட்சுமி, மாவட்டத் தலைவராக எம்.சஞ்சய், செயலாளராக பி.ஹாசினி, பொருளாளராக ஜெ.கவிபாரதி, துணைத் தலைவர்களாக ஜி.கவிதா, முகேஷ், துணைச்செயலா ளர்களாக டி.பரமேசுவரி, எம்.சாரு தேஷ்னா மற்றும் 27 மாவட்டக்குழு உறுப்பினர்கள், 13 வழிகாட்டும் குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், ஜி.கவிதா நன்றி கூறினார்.