கடந்த ஜூன் 8 ஆம் தேதி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கண் காணிப்பு குழு தலைவரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஆர். நடராஜன் பேசுகை யில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பொருளாதாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இம்மாவட்டத்தின் வளர்ச்சியை கணக்கில் கொண்டு கூடுதலான கடன் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பொருளாதார வசதியின்மையால் மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. வங்கிகள் இந்த ஆண்டு கல்வி கடனை அதிகப்படுத்த வேண்டும். இதற்கான முன் னோடி வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்கிற கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத் தப்பட வேண்டும். மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் சிறப்பு லோன் மேளா ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார். இதற்கான ஏற்பாடுகளை செய்வதாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் வங்கி அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்தே தற்போது மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் சிறப்பு மேளா நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை, ஜூன் 18– சிபில் பதிவாகிவிட்டால் கடன் கிடையாது என்பது போன்ற நிபந்த னைகளை வங்கிகள் பரீசிலித்து, நிர்ணயித்த இலக்கு கல்வி கடனை வழங்க வேண்டும் என, கல்விக்கடன் வழங்கும் சிறப்பு மேளாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி னார். கோவை மாவட்டம் கொடி சியா வளாகத்தில் சனியன்று மாபெரும் கல்வி கடன் மேளா நடைபெற்றது. மாவட்ட முன் னோடி வங்கி சார்பில் நடைபெற்ற இந்த கல்வி கடன் மேளா நிகழ்ச்சி யில் 14 வங்கிகள் சார்பில் 293 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 44 கோடி மதிப்பிலான கல்விக் கடன்களுக்கான ஆணைகளை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் ஏ.செந்தில்பாலாஜி, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் வழங்கினர். இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணை யாளர் எம்.பிரதாப், மாவட்ட முன் னோடி வங்கி மேலாளர் கௌசல்யா தேவி மற்றும் வங்கித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதுகுறித்து, மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், தமிழக முதல்வர் கோவை மாவட்டத்தில் கல்வி கடன் வேண்டி விண்ணப்பித்த அனைவருக்கும் கல்விக்கடனை வழங்கிட தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு உத் தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ரூ.350 கோடி மதிப்பிலான கல்விக் கடன்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. முதற்கட்டமாக ரூ.100 கோடி மதிப்பிலான கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. மாணவ, மாணவியர் களின் நலனில் அக்கறை கொண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் கல்விக்கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. மாணவ, மாணவியர்கள் கல்விக்கடன் பெறுவதற்கு தனிப் பட்ட முறையில் வங்கிகளை அணுகி கடன் பெறுவதில் சிரமம் ஏற்பட்டால், தாங்கள் பயின்று வரும் கல்வி நிறுவனங்கள் மூல மாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டால் கல்விக்க டன் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
வங்கிகள் நிபந்தனைகளை தளர்த்திடுக - பி.ஆர்.நடராஜன் எம்பி
இந்நிகழ்வில் பங்கேற்ற கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் பேசுகை யில், கோவை மாவட்டமானது கல்வி மையம் என்பதால், மாவட்ட வங்கிகள், நிர்ணயித்த இலக் குக்கு கடன் வழங்க வேண்டும். வங்கிகள், முதல் கல்வியாண்டில் பாட நிலுவை இருந்தால், இரண் டாம் கல்வியாண்டிற்கான கடன் கிடைக்காது என்று சொல்வதும், கடன் பெறுபவரின் தந்தை சிறு கடன் வாங்கியிருந்து, அது சிபி லில் பதிவாகி விட்டால் கடன் கிடை யாது என்பது போன்ற நிபந்த னையை வங்கிகள் பரிசீலிக்க வேண்டும். தொடர்ந்து, இந்த அரிய வாய்ப்பை மாணவ, மாண விகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.