districts

img

எஸ்.வலையபட்டியில் தீண்டாமைக் கொடுமைக்கு தீர்வு காண மறுக்கும் மாவட்ட நிர்வாகம்

மதுரை, ஜூன் 19- மதுரை மாவட்டம் திரு மங்கலம் தாலுகா சௌ டார்பட்டியிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் உள்ளது எஸ்.வலையபட்டி. இங்கு பத்து நாட்களுக்கு முன்பு சாதி ஆதிக்க சக்திகள் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். குறிப் பாக இங்குள்ள அங்கன் வாடி மையத்திற்கு தலித் சமூ கத்தைச் சேர்ந்த எம்.யோக லெட்சுமி, எம்.அன்ன லெட்சுமி ஆகியோரை பணி யாளர்களாக மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.நாகராஜன் நியமித் திருந்தார். தலித் சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் சமைப்பதால் சாதி ஆதிக்க சக்திகளின் தாக்குதலால் மற்ற சமூகத்தினர் தங்களது குழந்தைகளை அங்கன் வாடி மையத்திற்கு அனுப்ப மறுத்து பிஞ்சுக் குழந்தை களின் மனதில் நஞ்சை விதைத்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்திற்கு தினம்தோறும் அனைத்து சமூகத்தையும் சேர்ந்த 25 குழந்தைகள் வருவது வழக்கம்.  ஆனால் தற்போது அப்படி வருவதில்லை. புத னன்று தலித் சமூகத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடி மையத்திற்கு வந்திருந்தனர். அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் யோக லெட்சுமியும், அன்னலெட்சு மியும் ஈடுபட்டிருந்தனர். கருங்கிடாவை ஆடு வெட்டிவிட்டு ‘குழந்தை களை அங்கன்வாடிக்கு அனுப்பமாட்டோம்’ என சாதி ஆதிக்க சக்திகள் அடம் பிடிப்பதோடு இந்த மை யத்தையே சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தாக தெரிகிறது.

எஸ்.வலையபட்டியில் தலித் மக்களுக்கு ஒரு நாள், பிற சமூகத்தைச் சேர்ந்தவர் களுக்கு ஒரு நாள் என வெவ்வேறு நாட்களில் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றது. புதனன்று தலித்துகளுக்கு மட்டும் பொருட்கள் வழங் கப்பட்டன. இது குறித்து விசாரித்தபோது பிரச்சனை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து ஆர்டிஒ  பொருட்களை பிரித்து வழங்கச் சொன்ன தாக கூறினர். இங்குள்ள நடுநிலைப் பள்ளியை தினம்தோறும் சுத்தப்படுத்தும் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள், தம்மால் எட்டு நாட்களுக்கு வேலைக்கு வரமுடியாது என பள்ளியில் கூறியுள்ளார்.  இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, காட்டுப்பாதை யில் செல்ல மற்ற சமூகத்தி னர் அனுமதி மறுக்கின்றனர்; ரோசமுள்ளவர்களாக இருந் தால் இந்தப் பாதையில் வராதீர்கள் என்கின்றனர்; எனவே நான் வேலைக்கு வர முடியாது எனக் கூறி விட்டேன் என்றார். 

அங்கன்வாடி பிரச்சனை குறித்து விஷயமறிந்த ஒருவர் கூறுகையில், தினம்தோறும் மூன்று, நான்கு பிள்ளைகள் வந்தால் காலப்போக்கில் எண்ணி க்கை குறைவைக் காரணம் காட்டி, தீண்டாமையை முழுவதுமாக மறைத்து, மாவட்ட நிர்வாகம் இந்த மையத்தை மூடுவதற்குக் கூட முயற்சி செய்யலாம்; இல்லையென்றால் தற் போதுள்ள தலித் பணி யாளர்கள் மீது ஏதாவது ஒரு  குற்றச்சாட்டை சுமத்தி அவர்  களை வேறு ஊருக்கு மாற்றம் செய்யக்கூடும். இந்த இரண் டையும் சமூக ஆர்வலர் களும், தீண்டாமையை எதிர்ப்பவர்களும் அனுமதிக் கக்கூடாது என்றார்.

எஸ்.வலையபட்டி பிரச்ச னையை சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக மட்டுமே பொறுப்பு மாவட்ட ஆட்சியர் எஸ்.சாந்தகுமார் பார்க்  கிறார். இங்குள்ள தீண்டா மைப் பிரச்சனைகளை தீர்ப் பதற்கு போதிய ஆர்வம் காட்டவில்லையென்றே தோன்றுகிறது. இந்த நிலையில், சாதி ஆதிக்க சக்திகளால் பாதிக் கப்பட்ட தலித் மக்களுக்கும், சேதமடைந்த வீடுகள், ஆடு, மாடுகளுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும்;  இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனை வரையும் கைது செய்ய வேண்டும்; கிராமத்தில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி, தலித் அமைப்புகள் சார்பில் வியாழனன்று காலை 10 மணிக்கு மதுரை நடராஜ் திரையரங்கம் (பழங்காநத்தம்) அரு கில் ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.