நாமக்கல், மார்ச் 14- நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுடன் ராஜேஸ்குமார் எம்.பி., மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆகியோர் கலந்துரையாடினர். நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ராஜஸ்தானைச் சேர்ந்த 22 மாணவ, மாணவியர்கள், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 7 மாணவ, மாணவியர்கள், கேர ளாவைச் சேர்ந்த 9 மாணவ, மாணவியர்கள், ஹரியானா வைச் சேர்ந்த 4 மாணவ, மாணவியர்கள், தில்லியைச் சேர்ந்த 2 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 45 பேர் வெளி மாநி லங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இக்கல்லூரி கலையரங்கில் வியாழனன்று மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆகியோர் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர். அப் போது, ராஜேஸ்குமார் எம்.பி., பேசுகையில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தங்க ளது அவசர காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்கு உறுதிபடுத்தப்பட்ட ரயில் பயணச்சீட்டு பெறுவதற்கான சிர மங்களை போக்கி பயணச் சீட்டை உறுதி செய்திட எனது அலு வலகத்தின் மூலம் தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. எந்த நேரத்திலும், எந்த நாளிலும், எந்த உதவிக்கும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். இதற்காக மாணவர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழுவை உரு வாக்கி அக்குழுவின் மூலம் தங்களது கோரிக்கைகளை தெரி விக்கலாம். கடந்த ஜனவரி மாதம் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் இதேபோன்று வெளி மாநிலத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றதில் மகளிர் விடுதி அமைக்க கோரிக்கை வைத்தனர். உடனடியாக விடுதி அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதி வழங்கப்பட்டு, விடுதியில் மாணவியர்களுக்கு தேவை யான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக ஏற்ப டுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என் றார்.