திண்டுக்கல், ஜூலை 10- பஞ்சாலைத் தொழிலாளர்களுக்காக 6 ஆண்டுகள் வழக்கு நடத்தி பணிக்கொடை பெற்றுத் தந்த சிஐடியு தலைவர் களுக்கு பாராட்டு விழா வடமதுரையில் நடைபெற்றது. ஞாயிறன்று நடைபெற்ற இவ்விழாவிற்கு சிஐடியு பஞ்சா லைத் தொழிலாளர் சங்கத் தலைவர்களுள் ஒருவரான பி.முனியப்பன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் பஞ்சா லைத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.அசோகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.பிர பாகரன், பஞ்சாலைத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். சி.ஏ.வி.காட்டன் மில் சிஐடியு செயலாளர் என்.பி.பால சுப்ரமணி, பொருளாளர் சி.குருநாதன் ஆகியோர் இந்த மில்லில் பணியாற்றிய 142 தொழிலாளர்களுக்காக வழக்கு நடத்தி, பணிக்கொடையாக ஒவ்வொரு தொழிலாளருக் கும் தலா ரூ.1,50,000 வரை பெற்றுத் தந்துள்ளனர். கிட்டத் தட்ட 6 ஆண்டுகள் வழக்கு நடத்தி இந்த பணிக்கொடை பெற்றுத் தந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில், சங்கத்தின் சார்பாக தொடர்ந்து வழக்கு நடத்தி வெற்றி பெற்ற சி.ஏ.வி. மில் சிஐடியு கிளைத் தலை வர்களை மாநில பொதுச்செயலாளர் எம்.அசோகன் பாராட் டிப் பேசினார்.