சேலம், பிப்.2- சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பார்வையாளர்களுக் கென கட்டப்பட்ட கழிவறை பராமரிப் பின்றி, பாழடைந்து காணப்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். சேலம் மாநகரின் மையப்பகுதியில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினந்தோ றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து, தங்களின் புகார் மனுக்களை வழங்கி வருகின்றனர். மாவட்ட அள வில் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்து பெறுவதற்கான அலுவலகம் இங்குதான் இயங்கி வருகிறது. அதே போல ஆதார் அட்டை பெறுவதற்கான அலுவலகமும் இங்கே செயல்பட்டு வரு கிறது. மருத்துவ காப்பீடு மற்றும் மற் றும் ஆதார் அட்டை பெறுவதற்காக நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த பகுதியில் முறையான பராமரிப்பின்றி ஆண் மற்றும் பெண் கழிப் பறைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. இத னால் இந்த பகுதியில் திறந்த வெளியில் திறந்த வெளியில் கழிப்பறையாக பயன் படுத்தும் அவல நிலை நீடித்து வரு கிறது. ஆட்சியர் அலுவலகத்திற்கு வரு வோரில் பெரும்பான்மையோர் பெண்க ளாகவே இருப்பதால் இயற்கை உபாதை கழிக்க பெரும் சிரமத்திற்கு ஆளாகின்ற னர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத் திடம் பொதுமக்கள், சமூக ஆர்வலர் கள் பலமுறை புகார் அளித்தும் நடவ டிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, உடனடியாக கழிப்பறையை யும், சுற்றுப்புறத்தையும் தூய்மை செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.