districts

img

சிதலமடைந்து கிடக்கும் பேருந்து நிலையக் கட்டிடம்

உடுமலை, ஆக.24- பராமரிப்பு இல்லாமல், மக்கள்  பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள  பேருந்து நிறுத்த கட்டிடத்தை அப்புறப்ப டுத்தி, புதிய கட்டிடங்கள் கட்ட வேண் டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  வைத்துள்ளார்கள். உடுமலை தாலுகா ராஜாவூர் பிரிவு  அருகே 24 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் பேருந்து நிறுத்த கட்டிடம்  கட்டப்பட்டது. அதன் பிறகு போதுமான  பாராமரிப்பு செய்யப்படவில்லை. மேலும், சிலர் சமூக விரோத செயலக ளில் ஈடுபடுவது, பாட்டில்களை உடைத்து பேருந்து நிறுத்த கட்டி டத்திற்குள் போடுவது உள்ளிட்ட செயல் களால், பொதுமக்கள் பேருந்து நிறுத்த  கட்டித்தை பயன்படுத்துவதை தவிர்த்த னர். இதனால் தற்போது இக்கட்டிடம் மேற்கூறை கீழே விழும் நிலையிலும், செடிகள் வளர்ந்து விசஷப்பூச்சிகள் தங்கும் இடமாக மாறி உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் பேருந்து நிறுத்த  பகுதிகளில் கட்டப்பட்ட பல கட்டிடங் கள் தற்போது மிகவும் பலவீனமாக உள் ளன. ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பு, இது போன்ற கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட  வேண்டும். இல்லையெனில் கடந்த வருடம்  மடத்துக்குளம் தாலுகா கொழு மம் பகுதியில் பராமரிப்பு இல்லாத பழைய சத்திரக் கட்டிடத்தில் மழைக்கு ஒதுக்கிய மூன்று பேர் உயிர் இழந்தது போல், இந்த கட்டிடங்களிலும் விபத் துகள் ஏற்படக்கூடும். எனவே பொதுமக் களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு  புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும் என்றனர்.