தருமபுரி, செப்.18- தருமபுரி மாவட்டத்தில் ஞாயி றன்று இரவு பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை நிலவி வரும் நிலையில், ஒரு சில இடங்க ளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தருமபுரி யில் ஞாயிறன்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதை யடுத்து இரவு திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கி யது. இந்த மழையானது விட்டு, விட்டு அதிகாலை வரை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில் தண் ணீர் தேங்கி நின்றது. பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைத்ததால் அப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் தனர். இதேபோன்று அரூர் பகுதியில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அரூரில் 84.2 மி.மீ அளவு அதிகபட்சமாக பதி வாகி உள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. பென் னாகரம் ஏரியூர் பெரும்பாலை தாசம் பட்டி ஒகேனக்கல் சின்னம்பள்ளி மற் றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கன மழை பெய்தது. கன மழையினால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு நீர் வரத்து வரத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பென்னாகரம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதி கரித்த நிலையில், இரவு பெய்த மழை யினால் பொதுமக்கள் மற்றும் விவ சாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந் துள்ளனர். பென்னாகரம் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழையும், சுற்று வட்டாரப் பகுதி களில் அவ்வப்போது கனமழையும் பெய்தது.
நீலகிரியிலும் கனமழை
நீலகிரி மாவட்டம், உதகை மற் றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக பகல் நேரங்களில் வெயி லின் தாக்கம் குறைந்து, அவ்வப் போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திங்க ளன்று காலை முதல் வெயிலின் தாக் கம் காணப்பட்ட நிலையில், பிற்பக லில் மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட் டது. உதகை நகரில் மேகமூட்டத்து டன் கூடிய மிதமான மழை பெய்தது. அதேபோல் லவ்டேல், கேத்தி, எம்.பாலடா உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதனிடையே, உதகையில் இந் தாண்டு தென்மேற்கு பருவமழை தாக் கம் முற்றிலும் குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது நீண்ட நாட்க ளுக்கு பிறகு அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.