ஈரோடு, நவ. 19- ஈரோடு மாநகரில் சுமைப்பணி யாளர்களின் உரிமையைப் பறிக்கும் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசி யேசன் நிர்வாகம் மீது சுமைப்பணி தொ ழிலாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக் கைக்குழு காவல் கண்காணிப்பா ளரிடம் புகார் தெரிவித்துள்ளது. தமிழக பொது தொழிலாளர் சங்கம் பெரியார் நகர் மனோகரன், , ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்க செயலாளர் தென்னரசு, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் தெய்வநாயகம், சிஐடியு ஈரோடு மாவட்ட சுமைப்பணியாளர் சங்க தலைவர் தங்கவேல், தொழிலாளர் முன்னேற்ற பேரவை கோபால், ஏஐடியுசி செல்வம் ஆகிய தொழிற்சங் கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு சார் பில் அதன் நிர்வாகிகள் மற்றும் தொழி லாளர்கள் திரண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது,
ஈரோடு மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். சங்க விதிமுறைகள் படி கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன், ஜவுளி அசோசியேசன் மற்றும் விசைத் தறி உரிமையாளர் சங்கம் ஆகியவற் றுடன் ஒப்பந்தத்தின்படி வேலை செய்து கூலி பெற்று வருகிறோம். எவ்வித பிரச்ச னையுமின்றி 50 வருடங்களுக்கு மேலாக பணி செய்து வருகிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் புதுப்பித்து கூலி உயர்வு பெற்று வருகிறோம். இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக, சட்டத்திற்கு முரணாக, ஒப்பந் தங்களை மறைத்து எங்கள் சங்கங்க ளின் உறுப்பினர்களை மூன்றாம் நபர்க ளாகப் பாவித்து ஈரோடு மாவட்ட உரிமை யியல் நீதிமன்றத்தில் கூட்ஸ் டிரான்ஸ் ்போர்ட் அசோசியேசன் செயலாளர் பிங்கலன் வழக்குகளை தாக்கல் செய்து நீதிமன்ற நடவடிக்கைகளை தவறாகப் பயன்படுத்தி தொழிலாளர்களின் உரிமை மற்றும் வாழ்வாதாரத்தை பாதி க்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் கடந்த 15 ஆம் தேதி மேற்படி அசோசியேசனின் அங்கமான விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தில் 7 சுமைப்பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் கொடுக்காமல் நிலுவை இருந்தது. இதுகுறித்த கோரிக்கை யைத் தொடர்ந்து 7 தொழிலாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமைப்பணியாளர்கள் 7 பேருக்கும் உடனடியாக போனஸ் வழங்குவது என் றும், பணியிடை நீக்கம் ரத்து செய்யப் பட்டு பணியினைத் தொடரலாம் என்றும் முடிவானது. ஆனால் நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டாம் என்றும், வடமா நில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்றும், வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி னால் தான் குட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசனில் உறுப்பினராக இருக்க முடியும் என்று விஆர்எல் நிர்வா கத்தை மிரட்டினார். இந்நிலையில், அனைத்து தொழிற் சங்கங்களின் தலைவர், செயலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தோம். ஆனால் பிங்கலன் நீங்கள் என்ன செய்தாலும் உங்களது சங்க பணியாளர்களை எங்கள் அசோசி யேசனில் உள்ள எந்த நிறுவனத்திலும் வேலை செய்ய விடமாட்டோம் என்றார்.
வட மாநில தொழிலாளர்கள் தான் வேலை செய்வார்கள். உங்களால் முடிந்ததைப் பாருங்கள் என்று சவால் விடுத்தார். அத்துடன் வழக்கு நீதிமன் றத்தில் உள்ளது, காவல் துறை எங்க ளுக்கு ஆதரவாக உள்ளது, உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்று எங்கள் பணியாளர்கள் மீது மோதினார். இதனால் சிறிது கைகலப்பு ஏற்பட்டது. இவ்வாறு பிங்கலன், சுமைப்ப ணியாளர்களை சுமூகமாக பணி செய்ய விடாமல் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டு வருகிறார். ஆகவே, சுமார் 12 ஆயிரம் சுமைப்பணி தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு எங்களது சங்கங்களின் தொழி லாளர்களுக்கு எதிராக செயல்படும் ஈரோடு குட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசி யேசன் செயலாளர் பிங்கலன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு தெரிவித்துள்ளனர்.