districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சமூக நீதி மாநாடு நடத்த அனுமதி மறுப்பு புதிய திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்பு

நாமக்கல், பிப்.11- ஈரோட்டில் சமூக நீதி மாநாடு நடத்த அனுமதி மறுத்த காவல் துறைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பள்ளி பாளையத்தில் புதிய திராவிடர் கழகத்தினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய திராவிட கழகம் மற்றும் கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் இளைஞர் நலச்சங்கம் சார்பில், ஈரோடு மாவட் டம், கருங்கல்பாளையம் அருகே உள்ள மாட்டுச்சந்தை திடலில் “சமூக நீதி மாநாடு” ஞாயிறன்று (நேற்று) நடைபெறு வதாக இருந்தது. இதற்காக பல்வேறு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஈரோடு மாவட்ட காவல்துறை மாநாட்டிற்கு  திடீரென அனுமதி மறுத்தனர். இந்நிலையில், உடனடியாக மாநாடு நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என புதிய  திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஈரோடு மாவட்டம், பெருந் துறை பகுதியில் மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என நீதி மன்றம் அனுமதி வழங்கியது. இதனிடையே, கருங்கல்பாளை யம் பகுதியில் மாநாடு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட் டதைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லாங்காடு வலசு, மேட்டுக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதிய திராவிடர் கழகம் மற்றும் கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர்கள் இளைஞர் நலச் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆடு திருடிய 4 பேர் கைது

ஆடு திருடிய 4 பேர் கைது தருமபுரி, பிப்.11- மாரவாடி கிராமத்தில் ஆடுகளை திருடிச்சென்ற 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே உள்ள  மாரவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜன் (69). இவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இரவு தான் வளர்க்கும் ஆடுகளை வீட்டின் முன்பு கட்டி விட்டு,  தூங்க சென்றார். இந்நிலையில், சனியன்று நள்ளிரவு ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. இவர் வெளியே வந்து பார்த்த போது, 4 பேர் வெள்ளாடு ஒன்றை பிடித்து சொகுசு காரில் கடத்தி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து ராஜன் கொடுத்த புகா ரின் பேரில் மகேந்திமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சாமானூ ரைச் சேர்ந்த நவீன்குமார் (21), கொலசனஅள்ளியைச் சேர்ந்த  மனோஜ்குமார் (20), பொம்மனூரைச் கிராமத்தைச் சேர்ந்த  சுனில் குமார் (20) உட்பட 4 பேரையும் கைது செய்து, திருடப் பட்ட ஆட்டை மீட்டனர். 4 பேரும் தருமபுரியில் உள்ள தனி யார் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடதக்கது. 4 பேரை யும் பாலக்கோடு நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

வாழைத்தார்கள் விலை உயர்வு

வாழைத்தார்கள் விலை உயர்வு கோபி, பிப்.11- கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை  சங்கத்தில் வாழைத்தார்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கதளி, நேந்திரன், செவ்வாழை, பூவன், மொந்தன், தேன்வாழை உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் ஆயிரக்கணக் கான ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்து வருகின்ற னர். வாழை சாகுபடியில் அறுவடை செய்த வாழைத்தார்களை கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெறும் ஏல விற்பனையில் கொண்டு சென்று  விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று நடைபெற்ற வாழைத்தார் விற்பனை ஏலத்தில் குறைந்தளவு வாழைத்தார்கள் மட்டுமே ஏல விற்பனைக்கு வந்திருந்தன இதனால் வாழைத்தார்களை வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வாழைத்தார்களை ஏலத்தில் எடுத்ததால் வாழைத்தார்களின் விலை அதிகரித்தது இதில் கதளி கிலோ நேந்திரன் கிலோ ஒன்றுக்கு 22 ரூபாய் முதல்  24 ரூபாய்க்கும் வாழைத்தார்களில் தேன்வாழை தார் ஒன்றுக்கு 500 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்றுக்கு 500 முதல் 600 ரூபாய்க்கும், பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு 450 முதல் 500  ரூபாய்க்கும் செவ்வாழைத்தார் ஒன்று 750 முதல் 800 ரூபாய்க் கும் விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அரசு பள்ளியில் ஆண்டு விழா

அரசு பள்ளியில் ஆண்டு விழா ஈரோடு, பிப்.11- ஈரோடு மாவட்டம், பவானி ஒன்றியம், பெரிய புலியூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளையக்காரன்பாளை யத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை  ஆசிரியர் வே.ப.பிரபா வரவேற்றார். ஊராட்சி மன்ற தலை வர் கு.தங்கமணி, வட்டார கல்வி அலுவலர்கள் கு.கேசவன், வெ.தங்கதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர். இவ்விழா வில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற் றன. பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அடிக்கல் நாட்டு விழா

கோபி, பிப்.11- நம்பியூர் அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோசணம் ஊராட்சியில் கோபி ரைபிள் கிளப் சார் பில் புதிய துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கோபி ரைபிள் கிளப் செயலாளர் பிரபு தலைமையில் சங்கத்தின் தலைவர் பெருமாள் சாமி, துணை தலைவர்கள் அனுப், விஜய் மகேந்திரன், பொருளா ளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக தொடங்கப்பட உள்ள துப்பாக்கி சுடும்  பயிற்சி மையத்திற்கான கட்டிடத்திற்கு நம்பியூர் பேரூராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு அடிக் கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத் தார். இந்நிகழ்ச்சியில் நம்பியூர், கோபி  பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி  தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் உணவகம் வசதியின்றி மாணவர்கள் அவதி

கோவை, பிப்.11- கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு வார மாக பல்கலைக்கழ வளாகத்தில் அமைந்திருத்த உணவகம் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி ஒப்பந்தம் முடிவு காரண மாக செயல்பாடு இன்றி அமைந்துள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் மூன்றாயிரத் திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர் இதில் விடுதி மாணவர்கள் மற்றும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு வரு பவர்கள் என நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் உணவகத்தினை பயன்படுத்தி வந்தனர். கடந்த  ஒரு வாரமாக உணவகம் ஒப்பந்தம் மாற்றம் காரணமாக எந்த  ஒரு முன் அறிவிப்பும் இன்றி உணவகம் செயல்பாட்டில் இல்லாத காரணத்தினால் கல்லூரி மாணவர்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்வீரம்பாளையம் சென்று  உணவு உண்ண வேண்டிய அவல நிலை நிலவி வருகிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக உணவகம் வசதியின்றி  மாணவர் களின் அவல நிலையை கருத்தில் கொண்டு பல்கலைக் கழக நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பது மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

9 ஆடு பலி: வனத்துறை விசாரணை

தருமபுரி, பிப்.11- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பி.கொல்லஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நாக ராஜ் (45). இவர் ஆடுகளை வளர்த்து வாழ்க்கை நடத்தி வருகி றார். இந்நிலையில், சனியன்று வீட்டின் அருகிலுள்ள பட்டியில் தனது ஆடுகளை கட்டி விட்டு தூங்க சென்றார். இதையடுத்து ஞாயிறன்று விடியற்காலை ஆட்டுபட்டியில் இருந்து ஆடுகள் அலறல் சத்தம் கேட்டது. வெளியே சென்று பார்த்த போது  அடையாளம் தெரியாத விலங்கு கடித்து 9 ஆடுகள் பரிதாப மாக உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல றிந்த பாலக்கோடு வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ஆடு களை பிரேத பரிசோதனை செய்து, புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பள்ளியில் ஆண்டு விழா

கோபி, பிப்.11- கோபி அருகே உள்ள அரசு பள்ளி ஆண்டு விழாவில்,  திறனறித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிக ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் அரசு பள்ளியின் ஆண்டு விழா தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் தலைமை யில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்க ளாக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடா சலம், சிறப்பு சொற்பொழிவாளர் மஞ்சுநாதன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த  மாணவ, மாணவிகளுக்கும், முதல்வரின் திறனறித்தேர்வு, இலக்கிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், சிறந்த கல்வியை அளித்து ஊக்கப்படுத்தி வரும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நி கழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் காளி யண்ணன், திமுக ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், மாவட்ட  மகளிர் துணை அமைப்பாளர் ரேணுகாதேவி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சிவகாமி தங்கவேல் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

வலிப்பு நோய் விழிப்புணர்வு மாரத்தான்

வலிப்பு நோய் விழிப்புணர்வு மாரத்தான் சேலம், பிப்.11- சேலத்தில் நடைபெற்ற, சர்வதேச வலிப்பு நோய் விழிப்பு ணர்வு மாரத்தான் போட்டியில் பலர் கலந்து கொண்டனர். சர்வதேச வலிப்பு நோய் தினம் பிப்.12 ஆம் தேதி (இன்று)  அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, சேலம் நியூரோ  பவுண்டேசன் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மாரத் தான் நடைபெற்றது. சேலம் மூன்று ரோடு மருத்துவமனை முன்பு துவங்கிய இந்த விழிப்புணர்வு ஓட்டமானது ஐந்து ரோடு, புதிய பேருந்து நிலையம் வழியாக காந்தி விளை யாட்டு மைதானத்தை வந்தடைந்தது. இந்த விழிப்புணர்வு ஓட்டப்பந்தயத்தை நியூரோ பவுண்டேசன் மருத்துவமனை இயக்குநர் சேகர், நரம்பியல் துறை மருத்துவ நிபுணர்கள்  பிரபாகரன், பீரித்திஷ், நிஷா ஆகியோர் கலந்து கொண்டு  கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு  அழைப்பாளராக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.

கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா பொய்யான புகாரால் கைது: மனைவி குற்றச்சாட்டு

சேலம் பிப் 11 -  தன்னையும், தனது இரண்டு குழந் தைகளும் விரட்டி விட்ட கணவர் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி காவல் துறை  வாகனம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடு பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணை காவல்  துறையினர் செய்தனர். சேலம் மாவட்டம், திருவாக்கவுண்ட னூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் – சாந்தி தம்பதியின் இரண்டாவது மகள் ஆர்த்தி. கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு கண்ணன் என்பவருக்கு, ஆர்த் திக்கும் திருமணம் செய்து வைக்கப் பட்டது. இவர்களுக்கு இரண்டு ஆண்  குழந்தைகள் உள்ளனர். இதனிடையே,  கொரோனா பெரும் தொற்றால் ஆர்த்தி யின் கணவர் கண்ணன் உயிரிழந்தார். இதையடுத்து ஆர்த்திக்கு இரண் டாவது திருமணம் செய்து வைக்க  பெண்ணின் பெற்றோர் நடவடிக்கை  எடுத்தனர். அப்போது அமெரிக்கா வாழ்  இந்தியரான பாஸ்கர் என்பவருடன் ஆர்த்திக்கு கடந்தாண்டு பிப்.10 ஆம் தேதி திருமணம் செய்து வைத்தனர். இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலை யில், சனியன்று இரவு பாஸ்கர், ஆர்த்தி  மற்றும் ஆர்த்தியின் இரண்டு குழந்தை களுடன் சென்று கொண்டிருந்தபோது, திடீரென 3 பேரை நடுரோட்டில் விட்டு விட்டு பாஸ்கர் சென்றுவிட்டதாக கூறப் படுகிறது. சேலம் மாவட்டம், முள்ளு வாடி கேட் அருகே பாஸ்கருக்கு சொந்த மான தங்கு விடுதியில் இருப்பதாக தகவ லறிந்த ஆர்த்தி ஞாயிறன்று சென்ற போது, அங்கு பாஸ்கர் மற்றும் நகர காவல்துறையினர் இருந்துள்ளனர். அப்போது காவல்துறையினர் ஆர்த் தியை விசாரணைக்கு வரச்சொல்லி கூறியதால் என்னை எதற்கு அழைக்கி றீர்கள் எனக்கூறி காவல்துறை வாகனம்  முன்பு அமர்ந்து ஆர்த்தி தர்ணாவில் ஈடு பட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், தன்னையும் எனது  இரண்டு குழந்தையும் அடித்து துன்பு றுத்தி என்னுடன் வாழ மறுக்கிறார். மேலும் தினந்தோறும் தன்னை உடலு றவு வைப்பதற்கு தொல்லை செய்து வருகிறார். இதனால் மனவேதனை அடைந்த நான் கடந்த மாதம் தற்கொ லைக்கு முயன்றேன். அப்போது  என்னை எனது தாய் காப்பாற்றியுள் ளார். தொடர்ந்து தன்னை கொடுமைப் படுத்தி வருவதால் என்னால் வாழ முடி யவில்லை. மேலும் என் மீது தவறான குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க முற்படும்போது, தன் மீது பொய்யான புகாரை கொடுத்து காவல் துறையினர் விசாரணைக்கு அழைப்பது வேதனையாக உள்ளது. எனவே, தன்னைக் கொடுமைப்படுத்தி, எனது இரண்டு மகன்களையும் வெளி யேற்றிய பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதைய டுத்து அவரை காவல் துறையினர் கைது  செய்தனர்.

தக்காளி செடிகளை சேதப்படுத்திய காட்டு யாணை

தக்காளி செடிகளை சேதப்படுத்திய காட்டு யாணை ஈரோடு, பிப்.11-  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்  இருந்து உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய  தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்  கதையாகி வருகிறது. இந்நிலையில் சனியன்று இரவு வனப்ப குதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை சேஷன்  நகரைச் சேர்ந்த சதீஷ்(45) தோட்டத்துக்குள் புகுந்து தக்காளி  செடிகளை மிதித்து சேதப்படுத்தியது. மற்ற விவசாயிகள் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். எனவே, யானைகள் கிராமத்துக்குள் புகாத வண்ணம் வனப்பகுதியை  ஒட்டி அகழி அமைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்

கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் சேலம், பிப்.11- நில மோசடியில் ஈடுபட்டு அடியாட்களை கொண்டு மிரட்டும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பாதிக்கப்பட்டவர் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் புகாரளித்துள்ளார். சேலம் மாநகராட்சி, மணியனூர் பகுதியைச் சேர்ந்தவர்  மோகன். சிறு தொழில் நடத்தி வரும் இவர், அதேபகுதி யைச் சேர்ந்த காந்தி என்பவரிடம் 2500 சதுர அடி கொண்ட நிலத்தில் 2000 சதுர அடி வாங்கியுள்ளார். மீதமுள்ள 500 சதுர  அடி நிலத்திற்கும் 13 லட்சம் ரூபாய் காந்தியிடம் கொடுத்துள் ளார். இந்நிலையில், அருகிலுள்ள நிலத்திற்கு சொந்தக்கார ரான பழனிவேல் என்பவருக்கு, காந்தி 500 சதுர அடி நிலத்தை  மோகனுக்கு தெரியாமல் கிரையம் செய்து வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து மோகன் 500 சதுர அடிக்கும் சேர்ந்து 13  லட்சம் ரூபாய் தந்தும் ஏன் எனக்கு தெரியாமல் இப்படி செய் தீர்கள் என கேட்டதற்கு, அன்னதானப்பட்டி காவல் நிலை யத்தில் மோகன் மீது பொய்யான புகாரை அளித்து, அழைக்க ழிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மோகன் நடந்தவற்றை காவல் நிலையத்தில் தெரிவித்தும், அன்னதானப்பட்டி காவல்  துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்ப வத்தை பயன்படுத்தி காந்தி மற்றும் நிலத்தை வாங்கிய பழ னிவேல் குடும்பத்தினர், மோகனின் கட்டுப்பாட்டில் 500 சதுர  அடி நிலத்தில் இருந்த கட்டிடங்கள், கண்காணிப்பு கேமரா,  23 பட்டு புடவைகள் என ரூ.7.5 லட்சம் மதிப்பிலான பொருட் களை சேதப்படுத்தியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட மோகனை காந்தி, பழனிவேல், அவ ரது மகன் மணிகுமார் உள்ளிட்டவர்கள் தாக்குதல் நடத்தி  கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த மோகன் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். இப்பிரச்சனையில் காவல் துறையினர் உரிய தலையீடு செய்து, தனக்கு பாதுகாப்பு வழங்க வேண் டும் என மோகன் வலியுறுத்தியுள்ளார்.