districts

கோவையில் தீவிரமாக பரவும் டெங்கு காய்ச்சல்

கோவை, டிச.21- கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச் சல் வேகமாக பரவி வருகிறது.  கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச் சலை கட்டுப்படுத்த அரசு நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சுகாதார பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், அரசு மற்றும் தனியார் மருத்துவம னையில் டெங்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, பெரியவர்களை விட குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு, 30க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல்  அறிகுறிகளுடன் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்ச லுக்கு, 13 குழந்தைகள், 18 பெரியவர் கள் என 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதையடுத்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளுக்கு 30 படுக்கை, பெரியவர்களுக்கு 50 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, காய்ச் சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்  என அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.