உடுமலை, ஜூன் 30- செல்லப்பம்பாளையம் ஊராட்சி யில் நிலவும் குடிநீர் பிரச்சணைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள செல்லப்பம்பாளையம் ஊராட்சி முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். செயல்படுத்தாமல் இருக்கும் ஆழ்கு ழாய் கிணறுகளை உடனடியாக இயக்கி தண்ணீர் வசதியை உறுதி செய்ய வேண் டும். குடிநீர் விநியோகத்தில் இருக்கும் குளறுபடிகளை சரி செய்யும் வகை யில், நல்லார் காலணி கிணற்றிலிருந்து தண்ணீரை முழுமையாக கொண்டு வந்து சேர்க்க வேண்டும். ஊராட்சி முழுவதும் சுகாதாரப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், தூர்வாரப்படாத கழிவுநீர் கால்வாய் களை தூர்வார வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச்சட்டத் தின்படி, அடையாள அட்டை வைத் துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். பல்வேறு நிபந்தனைகளை காட்டி வேலை மறுக்கக்கூடாது. முழு மையான சம்பளம் வழங்க நடவடிக்கை வேண்டும். செல்லப்பம்பாளையம் ஊராட்சிச் செயலாளர் கடந்த 16 ஆண்டு காலமாக ஒரே ஊராட்சியில் பணியாற்றி வரும் நிலையில், இடமாறு தல் செய்யது அவர் மீது இருக்கும் ஏராள மான ஊழல் முறைகேடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்லப்பம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச் சுவர் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனி யன்று செல்லப்பம்பாளையம் பகுதி யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிளைச் செயலாளர் ஆர்.பிரபு தலைமை வகித்தார். இதில், ஒன்றியச் செயலாளர் கனகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் கள் தமிழ்தென்றல், நல்லப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.