திருப்பூர், அக். 25 - பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்தியத் தொலைத் தொடர்பு, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் இணைந்து திருப்பூரில் ஏழு அம்சக் கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி னர். பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கச் செயலா ளர் அண்ணாதுரை தலைமை ஏற்றார். ஓய்வூ தியர் சங்க நிர்வாகி பழனிவேல்சாமி ஊதி யம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை உடனடி யாக தீர்வு காண வேண்டும் என்று உரையாற் றினார். ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய நிர்ணயம், இபிஎப் உறுதி செய்ய வேண்டும் என சங்க நிர்வாகி ரமேஷ் கூறி னார். முன்னாள் மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், பிஎஸ்என்எல் 4ஜி 5ஜி சேவைகளை விரைவாக துவங்கவும், இரண் டாவது விஆர்எஸ் திட்டத்தை கைவிடவும் வலியுறுத்தினார். ஓய்வூதியர் சங்க அமைப் புச் செயலர் முகமதுஜாபர், கேசுவல் ஊழியர் களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் ஊதிய விகிதங்கள் மற்றும் இரண்டு தவணை பஞ்சப் படி ஆகியவற்றை விளக்கி சிறப்புரை ஆற்றி னார். முடிவாக அருண்குமார் நன்றி கூறி னார்.