districts

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், டிச.12- ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால், தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத் தும் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நாடு முழுவதும் மின் இணைப்பு களில் ஸ்மார்ட் மீட்டரை பொறுத்த, அனைத்து மாநில அரசுகளையும் ஒன் றிய பாஜக அரசு நிர்ப்பந்தித்து வரு கிறது. இந்த ஸ்மார்ட் மீட்டரை பொருத் திய பிறகு, காலை 6 மணி முதல் 10 மணி வரை, இதுபோல் மாலை 6 மணி முதல் இரவு 10 வரை பீக் அவர் மின் கட்டணம் எனவும் மற்ற நேரங்களில் சாதாரண மின்  கட்டணம் என  மூன்று வகையான மின் சார கட்டணத்தை நிர்ணயிக்க ஒன்றிய மோடி அரசு சூழ்ச்சி வகுக்கிறது. கேர ளம் அரசு இத்திட்டத்தை ஏற்க முடியாது  என கூறிவிட்டது. அதேபோல தமிழ்நாடு அரசும் இத்திட்டத்தை ஏற்கக்கூடாது. இத்தகைய திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் சிறு, குறு வியாபாரிகள் பாதிப் புக்கு உள்ளாவார்கள். மேலும், விவசா யிகளுக்கு இலவச மின்சாரமே இல்லாத நிலை உருவாகும். இத்திட்டத்தை தமி;ழ நாடு அரசு அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட் டம், திருமலைபட்டி உதவி மின் பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க  ஒன்றியத் தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பெருமாள், ஒன் றியச் செயலாளர் என்.ஜோதி உட்பட திர ளானோர் கலந்து கொண்டனர். இதே போல சித்தாளந்தூர் மின்வாரிய அலு வலகம் முன்பு விவசாயிகள் சங்க ஒன் றியத் தலைவர் ஏ.ஆர்.முத்துசாமி  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஏ.ஆதிநாராயணன், மாவட்ட துணைத் தலைவர்கள் பூபதி, வேலாயுதம், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டப் பொரு ளாளர் தங்கரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், பவானி அருகே  உள்ள அந்தியூர் பிரிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து தலைமை வகித்தார். அந்தியூர் தாலுகா நிர்வாகிகள் பி்ஆனந்தராசு, ஆர்.கணே சன், பவானி தாலுகா நிர்வாகிகள் என். பாலமுருகன், என்.சின்னச்சாமி, வாலி பர் சங்க தாலுகா பொறுப்பாளர் எஸ். செபாஸ்டியன், பவானி தாலுகா பொதுத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிபிஎம் அந்தியூர் தாலுகாச் செயலாளர் ஆர்.முருகேசன் நிறை வுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆட்சேபணை மனுக்கள் மின் வாரிய செயற்பொறியாளரிடம் வழங் கப்பட்டன. சத்தியமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.சடையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.எம்.விஜயகுமார், ஒன்றியச் செய லாளர் பி.வாசுதேவன், ஒன்றியத் தலை வர் பி.கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட  மனுக்களை மின்வாரிய செயற்பொறி யாளரிடம் அளிக்கப்பட்டது. கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயி கள் சங்க தாலுகாத் தலைவர் கதிர்வேல்  முன்னிலையில், தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கப் பொருளாளர் வெங்கிடு சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் விவசாயிகள் சங்க  மாவட்ட துணைத்தலைவர் முத்துச் சாமி, பொருளாளர் ரத்தினம், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கார்த்தி கேயன், மாவட்டக்குழு உறுப்பினர் சிவக் குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னனி பொருளாளர் மாரிமுத்து, மாதர் சங்க செயலாளர் மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, சிபிஎம் தாலுகா செயலாளர் துரைசாமி, விவ சாய தொழிலாளர் சங்க தாலுகாத் தலை வர் வி.ஆர்.மணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற மனு கொடுக்கும் போராட்டத் திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் முனியப்பன் தலைமை வகித் தார். இதில் மாவட்ட துணைத்தலைவர் கே.என்.மல்லையன், துணைச்செயலா ளர் சக்திவேல், ஒன்றியச் செயலாளர் ரவி, தலைவர் மகாராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.முத்து, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆர்.சின்ன சாமி, என்.கந்தசாமி உட்பட பலர்  கலந்து கொண்டனர். எச்.ஈச்சம்பாடி யில் ஒன்றியச் செயலாளர் ஏ.நேரு தலை மையில் நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்தில், மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுனன், மாவட்டக்குழு உறுப் பினர்கள் எஸ்.கே.கோவிந்தன், சி.சிங் காரம், ஒன்றியத் தலைவர் புத்தன், செய லாளர் ஏ.நேரு ஆகியோர் கலந்து கொண்டனர். பொம்மிடியில் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.தீர்த்தகிரி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் சி.வஞ்சி, வட்டப் பொரு ளாளர் பி.பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் தனுஷன், விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் எம்.கணேசன், தலைவர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.