districts

img

உடல் உறுப்புகளை தனியார் மருத்துவமனை திருடுவதாக குற்றச்சாட்டு

கோவை, ஜன.8-  கோவையில் உள்ள தனியார் மருத் துவமனை உடல் உறுப்புகளை திருடு வதாக கூறி பாதிக்கப்பட்டவர் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித் தார். மேலும், சம்மந்தப்பட்ட மருத்துவ மனை மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி சமூக ஜனநாயக அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலைப் பேட்டையை சேர்ந்த வர் பிரவீனா. இவர் வெள்ளியன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன் றினை அளித்தார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது தாயாருக்கு கடந்த ஏப்ரல் மாதம் காய்ச்சல் இருந்ததால் போத் தனூரில் உள்ள ஃபிம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித் தோம். அங்கு ஒரு நாளைக்கு ரூ.70 ஆயிரம் வரை கட்டணத்தை வசூ லித்தனர். இதன்பின் எனது தாயாரை கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு பண்ணைக்கு அழைத்துச் சென்றனர். அதற்கடுத்த நாள் எனது தாயார் இறந்துவிட்டார் என மருத்துவமனை நிர்வாகத்தின் தெரிவித்தனர். இதனால் நான் அதிர்ச்சியடைந்து விசாரிக்கையில், எனது தாயாரின் உடல் உறுப்புகளை சட்டவிரோதமாக திருடுவதற்காகதான் பண்ணைக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. மேலும், எனது தாயார் அணிந் திருந்த தங்க நகைகளும் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து கேள்வி கேட்ட என்னை மருத்துவமனை நிர் வாகம் அடித்து விரட்டி விட்டனர். ஆகவே, உடல் உறுப்புகளை திருடும் மருத்துவமனைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்ததாக தெரிவித் தார். ஆர்ப்பாட்டம் இதனிடையே ஃபிம்ஸ் மருத்துவ மனையில் பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடப்பதாக கூறி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு  அனைத்து ஜனநாயக அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத் தைகள் கட்சியின் மாவட்ட செயலா ளர் ஜோ.இலக்கியன், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், திவிக நேருதாஸ், மக் கள் அதிகாரம் மூர்த்தி உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.