districts

img

மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து சேலம் மாவட்டத்தில் 13 மையங்களில் ஆர்ப்பாட்டம்

சேலம், மே 21- மோடி அரசின் மக்கள் விரோத  போக்கை கண்டித்து இடதுசாரிகள் விசிக இணைந்து சேலம் மாவட் டம் முழுவதும் 13 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த  முடிவு செய்துள்ளது. பெட்ரோல், டீசல் சமையல் எரி வாயு சிலிண்டர்களின் விலையை குறைத்திட வேண்டும். வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். வேலைவாய்ப்பை பெருக்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், சிபிஐ (எம் எல்) ஆகிய கட்சிகள் இணைந்து மாநில அளவில் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சேலம் சிபிஐ மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டுக்குழு கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 13 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப் பட்டது. இதன்படி, சேலம் மாவட்ட ஆட் சியர் அலுவலகம் முன்பு 26 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை  நடத்துவது. 27 ஆம் தேதி மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, கொங்கணாபுரம், நங்கவள்ளி, ஜல கண்டபுரம், வாழப்பாடி, பெத்தநா யக்கன்பாளையம், கல்வராயன் மலை, ஏற்காடு, ஆத்தூர், கெங்க வல்லி ஆகிய மையங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மே  25 முதல் 31 ஆம் தேதி வரை அனைத்து இடங்களிலும் வீடு வீடாக  சென்று பிரசுரம் கொடுத்து பிரச்சா ரம் செய்வது எனவும் முடிவெடுக் கப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். குண சேகரன், சிபிஐ மாவட்ட செயலா ளர் எ.மோகன், விசிக வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த், சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் கோ.  மோகனசுந்தரம், விசிக மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் உள் ளிட்டு பலர் பங்கேற்றனர்.