districts

img

மூன்று குற்றவியல் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 29- ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த முப்பெரும் குற்றவியல் சட்டங்களில் செய்யப்பட்ட திருத்தத்தை ரத்து செய் யக் கோரி, கோவை நீதிமன்றம் முன்பு  திங்களன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் முப்பெரும் குற்றவி யல் சட்டங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை ரத்து செய்யக் கோரி, திங்களன்று தில்லி ஜந்தர் மந்தரில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த ஆயி ரக்கணக்கான வழக்கறிஞர்கள் பங் கேற்ற மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  தலைநகர் தில்லியில் போராடும் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக கோவை நீதிமன்ற வாயில் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில், மூன்று குற்றவியல் சட்ட திருத்தத்தினால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கி, பதாகை களை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், இந்த மூன்று குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் காவல்துறைக்கு கட்டற்ற  அதிகாரத்தை வழங்கும். இவற்றை உட னடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். ஆர்ப்பாட்டத்தில் திரளான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.