districts

img

மிரட்டல் விடுக்கும் பாஜக பிரமுகரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம், ஜன.4- ஓமலூர் கோட்டை கவுண்டம்பட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த நவ் சாத் என்பவர், பழைய இரும்பு பொருட் களை வாங்கும் வியாபாரம் செய்து  வருகிறார். சேலம் மாவட்டம், ஓம லூர் அருகே உள்ள கோட்டை கவுண் டம்பட்டி பகுதியில் ஹை டெக் நிறு வனத்தில் பணிபுரியும் பாஜக பிரமு கர் கண்ணன் என்பவரிடம் ரூ.1.5 கோடி மதிப்பில் பழைய இரும்பு  பொருட்களை வாங்க முடிவெடுத்து, 35 லட்சம் ரூபாய் முன்பணமாக வழங் கியுள்ளார். இதேபோல் கேரளா வைச் சேர்ந்த மற்றொரு வியாபாரி  குட்டி பிளான் என்ற நிறுவனத்தை நடத்தி, கண்ணனிடம் பழைய இரும்பு பொருட்களை வாங்கி வியா பாரம் செய்து வந்தார். இந்நிலையில், குட்டி பிளான் நிறுவனத்திற்கும், பாஜக பிரமுகர் கண்ணனுக்கும் வியாபா ரத்தில் நட்டம் ஏற்பட்டதாக பிரச்சனை இருந்துள்ளது. இதையடுத்து குட்டி ப்ளான் நிறுவனர், நவ்ஷாத் உடன் ஒருமுறை வந்ததால் அவரும் உங் கள் நண்பர் தான். அதனால் அவர் தர வேண்டிய பணத்திற்கு, உங்கள்  பணத்தை எடுத்துக்கொண்டேன். அவரிடம் எனக்கு நட்டமான பணத்தை வாங்கி கொடுத்தால் தான் 35 லட்சம்  ரூபாயை உங்களுக்கு தருவேன் என கண்ணன் மிரட்டியுள்ளார். இதுகுறித்து நவ்ஷத் சிபிஎம் சேலம் மாவட்டக்குழுவில் முறையிட் டார், அதனடிப்படையில் மார்க்சிஸ்ட்  கட்சி தலையிட்டது. சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நவ்ஷாத்திற்கு தரவேண்டிய பணத்தை தருவதாக பாஜக பிரமுகர் கண்ணன் தெரிவித்து எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால், இதுவரை பணத்தை தராமல் அவர் இழுத்தடிப்பு செய்தும், பிரச்சனை செய்தால் கடும் விளைவுகளை சந் திக்க நேரிடும் என நவ்ஷத்தை மிரட்டி யுள்ளார். இதனை கண்டித்தும், நவ்ஷாத் திற்கு வழங்க வேண்டிய 35 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்க வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் ஓமலூர் தாலுகாச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் ஓமலூர் கோட்டை கவுண்டம்பட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலை முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இப்பிரச்சனை சம்பந் தமாக காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.