districts

img

வெறுப்பு அரசியலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மே 29- ஒன்றிய பாஜக அரசின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக வேலம்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலம்பாளையம் தண்ணீர் பந்தல் காலனி பகுதியில் இடதுசாரிகள், ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள் கைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிபிஎம் வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் நகரக் குழு உறுப்பினர்கள் அ.உமாநாத், பி.சின்னச்சாமி, சிபிஐ 11ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.செல்வராஜ், தண்ணீர் பந்தல் காலனி கிளைச் செயலாளர் செந்தில்குமார், வீரப்ப செட்டியார் நகர் கிளைச் செயலாளர் மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.