திருப்பூர், பிப். 6 - மாற்றுத் திறனாளிகள் நலனைப் புறக்கணித்து, உரிமைச் சட்டத்தை அமலாக்க நிதியையும் குறைத்து, உதவித் தொகையை உயர்த்தாமல், நூறு நாள் வேலை திட்ட நிதியை யும் 30 சதவிகிதம் வெட்டியுள்ள ஒன்றிய பட்ஜெட்டைக் கண் டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத்த லைவர் டி.ஜெயபால் தலைமையில் திங்களன்று திருப்பூர் கும ரன் நினைவகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ், மாநிலக்குழு உறுப்பினர் நா.சஞ்சீவ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோ.பொம்முதுரை நன்றி கூறினார்.