districts

img

தருமபுரி காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூலை 9- நாமக்கல் மாவட்டம் குமாரபாளை யத்தில் அனைத்து வகை மாற்றுதிறா னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள்  மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க்தித்ன மாநில பொதுச் செயலாளர் நம்புராஜன் தலை மையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று தினங்க ளுக்கு முன்பு தருமபுரியில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த குடியேறும் போராட்டத்தை நடத்த  சென்றவர்களை அராஜகமான முறை யில் போலீஸ் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.  போலீசாரின் இந்த அராஜகப் போக்கை கண்டித்து நாமக்கல் மாவட் டம், குமாரபாளையம் நகரம் பள்ளிபா ளையம் பிரிவு ரோட்டில் நகரத் தலைவர்  பி.பராசக்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்க மாவட்ட அமைப்பாளர் எம் ஆர். முருகேசன், சிபிஐஎம் நகர செயலாளர் என்.சக்திவேல், தமுஎகச மாவட்ட தலை வர் காந்தி, சரவணன், நகர கிளை  துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம் ஆனங்கூர், எம்.செந்தில், திருச்செங் கோடு ரவிச்சந்திரன், ஆனந்தகுமார், அர்ஜுனன், ஜி.மோகன், சாந்தி, பாக்கி யம், ஜி.சண்முகம் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.