திருப்பூர், பிப்.15 - தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் மக்களை தேடி மருத்துவ ஊழியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதி யம் வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள் ளதாக, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையத் தில் சனியன்று மக்களை தேடி மருத்துவ ஊழி யர்கள் சங்கம் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர் டி.லட்சுமி, திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ்.மகாலட்சுமி ஆகி யோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.சந் திரன், மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையின் கீழ் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் 13 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். தற்போது இவர்க ளுக்கு கடும் பணிச்சுமை உள்ளது. 2 மணி நேரம் வேலை என பணியமர்த்திவிட்டு, 8 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்குகின்றனர். மேலும், மாத ஊதியம் ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தி யும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மருத் துவ அலுவலர்கள், திட்ட அலுவலர் கள், துணை திட்ட அலுவலர்கள் உள் ளிட்டோர் பெண் பணியாளர்கள் மீது ஒடுக்கு முறை நிகழ்த்துகின்றனர். இதுகுறித்து கடந்த ஜன.25 ஆம் தேதி சுகாதார இயக்குநர், மகளிர் மேம்பாட்டு ஆணைய இயக்குநர், தேசிய சுகா தாரப் பணி இயக்குநர் ஆகியோருடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் ஏற்ப டாததால் விரைவில் வேலை நிறுத்தம், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக ளைத் தடுக்க முறையாக விசாகா குழு அமைக்க வேண்டும். உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்க ளுக்கு உரிய நியாயம் கிடைக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.