districts

img

ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் பள்ளி மாணவர்கள்

தருமபுரி, அக்.18- ஆற்றில் வெள்ளப்பெருக்கால் நத்தஅள்ளி கிராம பள்ளி மாணவர் கள் ஆபத்தான முறையில் ஆற்றை  கடந்து செல்ல வேண்டிய நிலையில், ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது.  தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட  நத்தஅள்ளி கிராமம். இக்கிரா மத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிரா மத்திற்கு போதிய சாலை வசதி இல்லை. இக்கிராம மக்கள் நாகா வதி ஆற்றினை கடந்து தான் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், பென்னாகரம், இண்டூர் பகுதிகளில் பெய்த கன மழையால் பத்துக்கு மேற்பட்ட ஏரி கள் நிரம்பி உள்ளன. இதனால் உபரி நீர் நாகாவதி ஆற்றில் செல்வ தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. இதனால் இக்கிராம மக்கள் ஆற்றின் ஒரு கரையிலி ருந்து மற்றொரு பகுதியான குடி யிருப்பு பகுதிக்கு ஆபத்தான முறையில் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இக்கிராமத்தில் ஆற்றின் இரு புறமும் அரசு பள்ளிகள் செயல்படு கின்றன. ஒருபுறம் உயர்நிலைப் பள்ளி, மற்றொருபுறம் துவக்கப் பள்ளி உள்ளது. மேலும் இண்டூர்  பகுதியில் மேல்நிலை பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு தினமும் 3000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் சென்று வருகின்றனர். இதே போல் விவசாய கூலி வேலைக்கும்,  அறுவடை செய்த காய்கறிகளை சந்தைகளுக்கும், தினமும் பால் விற்பனை செய்வதற்கு நாகாவதி ஆற்றினை கடந்து சென்று வர வேண்டும். தொடர்ந்து பெய்த கன மழையால் தரைப்பாலம் வெள்ளத் தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆற்றில் தண்ணீர் படிப்படியாக அதிகரித்து வருவதால் ஊர் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு சென்று வருகிறோம் என அக்கிராமத்தில் தெரிவித்தனர். எனவே, கிராமத்துக்கு சாலை  அமைத்தும், ஆற்றின் குறுக்கே  தரைப்பாலம் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும்  பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்குவ தால் பள்ளி கட்டிடத்திற்கு எந்த வித இடையூறும் ஏற்படாதவாறு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.