districts

img

ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை

உடுமலை, ஜன.1- மழைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில், உடுமலை ஒன்றியத்திற் குட்பட்ட எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மேம்படுத் தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்ற  வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது. எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகா தார நிலைய கட்டுப்பாட்டில்  உடு மலை ஒன்றியத்திலுள்ள 38 கிராமங் கள் பயன்பெற்று வருகின்றன. எரிச னம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தின் கட்டபாட்டில்  தளி, திரு மூர்த்திநகர், ராவணாபுரம், ஜல்லி பட்டி, கொங்கலக்குறிச்சி, கொடிங்கி யம் என எட்டு துணை சுகாதார நிலை யங்களும், மலைவாழ் குடியிருப்பு பகுதியான பூச்சிக்கொட்டாம்பாறை, கருமுட்டி, காட்டுப்பட்டி, மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை உள்ளிட்ட  மலைமக்கள் செட்டில்மெண்ட் பகுதிகளும் இந்த சுகாதார நிலைய கட்டுப்பாட்டில் உள்ளது.  எரிசனம்பட்டி சுகாதார நிலை யத்திற்கு கிராமப் பகுதிகளிருந்து பொதுமக்கள் அதிகமாக வருவ தால் போதிய வசதிகள் இல்லை. இந்த சுகாதார நிலையம்  ஆரம்ப கால மக்கள் தொகையின் படி மூன்று  மருத்துவர்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையில் சுகாதார ஆய்வா ளர்கள்,  செவிலியர்கள்  பணியாற்றி வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்திற்கு தினந்தோறும் சராசரியாக மூன்னூ றுக்கும் மேற்பட்ட புறநோயாளி களும், மாதத்திற்கு முப்பதுக்கும் மேற்பட்ட பிரசவங்களும், கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைகள் செய் கின்றனர். மேலும், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆறு  படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளன.

சராசரியாக பத்து  உள்நோயாளியாக அனுமதிக்கப்படுகின்றனர். இத னால் நோயாளிகள் மிகுந்த அவதிக் குள்ளாகி வருகின்றனர். கூடுதலாக படுக்கை வசதி ஏற்படுத்த வேண் டும் என பொதுமக்கள் சார்பில் பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.  மலைவாழ் மக்கள் செட்டில் மெண்ட் பகுதி மக்களுக்காக மாவ டப்பில் செயல்பட்டு வந்த துணை சுகா தார நிலையம் செயல்படவில்லை. இதனால் மலை வாழ் மக்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க எரி சனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர் கள் செட்டில்மெண்ட் பகுதிக்கு செல் கின்றனர். இதனால் புற நோயாளி கள் பல மணி நேரம் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படு கிறது. மேலும், சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் இதர பணிகளுக்கு மருத்துவர்கள் செல்வதால், கிராமப் புற மக்களுக்கு உடனடி சிகிச்சை கிடைப்பதில்லை. எனவே, புறநோயாளிகள் எண் ணிக்கையின் அடிப்படையில் எரி சனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலை யத்தை சிறப்பு மருந்துவர்கள் மற்றும் அதிக படுக்கை வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட  அரசு மருந்துவ மனையாக மாற்ற வேண்டும் என் பதே இப்பகுதி கிராம மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.