உடுமலை, மார்ச் 16- உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் செத்து மிதக்கும் விலங்குகைளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெறுமை, காட்டுபன்றி உள் ளிட்ட பல்வேறு வகை விலங்கினங்கள் வாழ்ந்து வரு கின்றன. இந்நிலையில் கோடை காலம் தொடங்கியதால், வனப்பகுதியில் இருந்து குடிநீர் தேவைக்காக அமரா வதி அணை மற்றும் திருமூர்த்தி அணையை நோக்கி விலங் குகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வர தொடங்கி யுள்ளன. இவ்வாறு வரும் விலங்கள் தண்ணீருக்குள் விழந்து உயிரிழந்து விடுகிறது. குறிப்பாக, காண்டூர் கால்வாய்க்கு குடிநீர் தேவைக் காக வரும் விலங்குகள் உள்ளே விழுந்து உயிரிழந்து சட லங்களாக திருமூர்த்தி அணையில் மிதந்து வருகிறது. இத னால் குடிநீர் மாசுபடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகை யால் அணையில் மிதக்கும் விலங்குகளின் சடலங்களை அகற்ற பொதுப் பணித் துறை, வனத் துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.