districts

img

பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர கோரிக்கை

தருமபுரி, ஜன.11- தருமபுரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி  நிலங்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தலித் விடுதலை இயக்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதாவிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, காரி மங்கலம், பாப்பிரெட்பட்டி, பென்னாகரம் அரூர், பாலக் கோடு ஆகிய 7 வட்டங்கள் உள்ளன. இந்த வட்டங்களில் உள்ள  சுமார் 37 கிராமங்களில் வசிக்கும் தலித் மக்களுக்கு அரசால் நிபந்தனையின் அடிப்படையில் 1204 ஏக்கர் 64 சென்ட் பஞ்சமி  நிலங்கள் இலவசமாக வழங்கப்பட் டது. இந்த நிலத்தின் பெரும்பகுதி மற்ற சமூகத்தினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சனை யில் மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு பஞ்சமி நிலங்களை மீட்டு சம்மந்தப்பட்ட மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் கடந்த 2019 - 20 ஆம் கல்வி ஆண்டில் கூடுதல் பொறுப்பு முதல்வ ராக பணியாற்றியவர் பேராசிரியர் பாக்கியமணி. அப் போது, இவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து  தலித் பேராசிரியர்கள் பலரை சாதிய ரீதியாக பழிவாங்கி யுள்ளார். எனவே பாக்கியமணி மீது எஸ்.சி/எஸ்.டி  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தலித் விடுதலை இயக்க மாநில தலை வர் கருப்பையா உள்ளிட்டோர் தருமபுரி மாவட்ட  வருவாய் அலுவலர் அனிதாவிடம் மனு அளித்தனர்.