districts

img

இடைத்தரகர்கள் ஆதிக்கத்தில் உழவர் சந்தைகள் விவசாயிகளும், நுகர்வோரும் பயன்பெற அரசு தலையிட கோரிக்கை

சேலம் மாவட்டத்தில் வேளாண் பொருட்களான காய் கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைப்பொருட்களை நேரடி யாக நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் அங்கமாக திகழும் உழவர் சந்தைகளில் தற்போது வெளி ஆட்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. இதனால்  விளைப் பொருட்கள் நேரடியாக  மக்களுக்கு செல்லாமல், அதிகாரி களின் லாப நோக்கத்திற்காக விற் பனையாளர்களுக்கு உழவர் சந்தைகளில் இடங்கள் ஒதுக்கப் பட்டு விளைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத னால், விளைப்பொருட்களின் தரம் கேள்விக்குறியாகவே மாறி  உள்ளது. தமிழ்நாட்டில் விவசாயிகள்  விளைவிக்கும் பொருட்கள் நேரடி யாக பொதுமக்களுக்கு விற் பனை செய்ய ஏற்படுத்தப்பட்ட உழவர் சந்தைகள் கலைஞர்  ஆட்சிக்காலத்தில் உருவாக்கப் பட்டது. சேலம் மாவட்டத்தில் 15க் கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் உள்ளது. காலை 6 மணி முதல்  செயல்பட துவங்கும் இந்த உழவர்  சந்தைகளில், விவசாயிகள் உற் பத்தி செய்யும் பொருட்களை குறைந்த விலைக்கு, பொது மக்களிடையே நேரடியாக விற் பனை செய்து வந்தனர். காலப் போக்கில் உழவர் சந்தைகளில் உழவர்களைத் தவிர வெளி ஆட்களின் ஊடுருவல் அதிகம் இருந்து வருகிறது.

அதிகாரிகளின் தவறான தலையீடு

சேலம் மாநகரப் பகுதிகளில் குறிப்பாக சூரமங்கலம், தாத காப்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி ஆகிய நான்கு உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. காலை, மாலை என  இரண்டு வேலைகளிலும் உழவர்  சந்தைகள் செயல்பட்டு வரும்  நிலையில், உழவர் சந்தையில் நியமன அலுவலர்கள் உழவர் களுக்கு முக்கியத்துவம் கொடுக் காமல், வெளி வியாபாரிகளுக்கு கடைகளை விடும் அவலம் அரங் கேறி வருகிறது. உழவர் சந்தை  துவக்கப்பட்ட காலம் முதல்  நுகர்வோர்கள் என நேரடியாக  விளைப்பொருட்களை வாங்கி  வந்த நிலை மாறி, இடைத்தரகர் கள் போல் வியாபாரிகள்  விலையை உயர்த்தி வியாபாரம் செய்வதால் விளைப்பொருட் களின் தரமும், விலையும் அதிக ரித்து காணப்படுகிறது.

உழவர் சந்தையின் நோக்கம்

தமிழ்நாடு வர்த்தக மற்றும்  தொழில் துறைகளின் அப்போ தைய தலைவர் எஸ்.ரத்தினவேல் என்பவர், விவசாயிகள் எப்படி  விளைப்பொருட்களை விற்பனை  செய்கிறார்கள்? என நாடு  முழு வதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு ஒரு ஆய்வறிக்கையை தயாரித்தார். அதன்பின் மதுரை யில் முதல் உழவர் சந்தை 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மதுரையில் துவங்கிய உழவர்  சந்தை தமிழ்நாட்டின் பல்வேறு  மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டது. சென்னை, பல்லா வரத்தில் 100 ஆவது உழவர் சந்தை  துவங்கப்பட்டது. இதுவரை மாநிலம் முழுவதும் 179 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. உற்பத்தியாளர்களுக்கும், நுகர் வோருக்கும் நேரடியாக பொருட் களை பெற இந்த உழவர் சந்தை கள் துவங்கப்பட்டன. ஆனால், தற் போது அதிகாரிகளின் அதிகார விதிமீறலால் உழவர் இல்லாத உழவர் சந்தைகளே பெரும் பகுதி யில் காணப்படுகிறது.

வஞ்சிக்கப்படும் உழவர்கள்

உழவர் சந்தைகளில் சிறு கடை களை அமைக்க அனைத்து உழவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மேலும், 40 கிலோ மீட்டர் தொலைவு வரை அந்த அடை யாள அட்டையை பயன்படுத்தி அருகிலுள்ள உழவர் சந்தை களில் விற்பனை செய்யவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் உழவர் கள் கடைகளை அமைக்க அர சாணை உள்ளது. ஆனால், சுய லாபத்திற்காக விவசாயிகளை அதிகாரிகள் வஞ்சித்து வருகின் றனர். கேள்வி கேட்கும் விவசாயி களுக்கு உழவர் அட்டைகளை வழங்க மறுப்பதாக தற்போது எண்ணற்ற விவசாயிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர். மேலும், வெளி  ஆட்களை வைத்து பொருட் களை விற்பனை செய்து வரு கின்றனர். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பொருட்களின் தரமும், விலையும் மக்கள் வாங்கும் அளவில் இருந்தது. ஆனால், உழவர் சந்தைகளில் வெளி ஆட்களை புகுத்துவதால் பொருட்களின் விலையும் உயர் கிறது. தரமும் குறைகிறது என  பொதுமக்கள் வருத்தம் தெரிவித் துள்ளனர்.

உழவர் சந்தைகள் உழவனுக்கே

சேலம் மாவட்டம் மட்டுமல் லாமல் மாநிலம் முழுவதும் உள்ள  உழவர் சந்தைகளில் அரசின் உயர்  அதிகாரிகள், உழவர் சந்தைகளில்  உழவர்கள் தான் கடைகளை நடத்துகிறார்களா? என ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வெளி  ஆட்களை கொண்டு வியாபாரம்  செய்ய அனுமதித்த வேளாண்மை  அதிகாரிகள் மீது தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். உழவர்  உற்பத்தி செய்யும் விளைப் பொருட்களை நேரடியாக மக்க ளுக்கு கிடைக்கும் வகையில்  தமிழக அரசு உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக் கப்பட்டுள்ளது.

-எழில், சேலம்.