districts

img

சேலம் மத்திய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யக் கோரிக்கை

சேலம், பிப்.20- சேலம் மத்திய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சி யர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்தனர். சேலம் மத்திய பேருந்து நிலையத்திலி ருந்து தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப் படுகின்றன. இங்கிருந்து ஆந்திரா, கேரளம், தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற  மாநிலங்களுக்கும், தமிழகத்தில் பல முக்கிய ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படு கின்றன. தினசரி 40 ஆயிரம் முதல் 90 ஆயி ரம் வரையும், விடுமுறை, முகூர்த்த தினங்க ளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் பேருந்து நிலையமாக உள் ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த  இந்த பேருந்து நிலையம், இடநெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. மத்திய பேருந்து நிலை யத்தை விரிவாக்கம் செய்வதே இதற்கு நிரந்தர தீர்வாகும். இதற்கு பேருந்து நிலையத்தின் கிழக்கு  பக்கம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் தேவையான அளவு உள்ளது. இந்த இடம் பேருந்து நிலைய விரிவாக்கத் திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தீர்ப்புக்கு மாறாக அங்கு வணிக நோக்கில் அடிக்கடி கண்காட்சி அரங்கம் அமைக்கப்படுகிறது. அதில் ஒரு பகுதியை பேருந்து நிலைய விரி வாக்கத்திற்கு, குறிப்பாக உள்ளூர் (டவுன் பஸ்) பேருந்து நிலையத்திற்கும், ஆம்னி  பேருந்து நிறுத்ததிற்கும் ஒதுக்கி கழிவறை கள், குடிநீர், மின்விளக்கு வசதிகள் செய்து  கொடுத்தால் பொதுமக்கள் சிரமமில்லா மல் சென்று வருவார்கள். போக்குவரத்து நெரிசலும் குறையும். அதேபோல் பாதுகாப்பிற்காக போதிய கண்காணிப்பு கேமரா பொருத்திட வேண் டும். மேற்படி காலி இடத்தில் வாடகை கார்கள்  ஏராளமாக நிறுத்தி வருகின்றனர். அவர்க ளுக்கும் சேர்த்து அதில் ஒரு இடத்தை ஒதுக் கினால் எவ்வித சிரமமும் இருக்காது. எனவே, இதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அம்மனுவில் வலியுறுத்தி உள்ளனர். முன்னதாக, மனு அளிக்கும் நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செய லாளர் என்.பிரவீன்குமார், மாநகரக்குழு உறுப்பினர்கள் வி.வெங்கடேஷ், பி.செந்தில் குமார், ஆர்.கே.சங்கர் ஆகியோர் பங்கேற்ற னர்.