தருமபுரி, பிப்.1- அரூர் அருகே உள்ள வள்ளிமதுரை வரட் டாறு அணையின் கால்வாய்களை தூய் மைப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட் டாறு அணை. கடந்த ஆண்டு பெய்த வடகி ழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழை யால் வரட்டாறு அணை நிரம்பி, அதன் உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த அணை யில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பயன்படுத்தி கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடு மியாம்பட்டி, ஒடசல்பட்டி, எல்லப்புடை யாம்பட்டி, கம்மாளம்பட்டி, முத்தானூர், மாவேரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம் குட்டைகள் நிரப்படுகின்றன. இந்நிலையில், வள்ளிமதுரை வரட் டாறு அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் தூய்மை செய்யப்படாமல் முள்புதர்கள் அடைந்து காணப்படுகிறது. எனவே, சேதமடைந்த கால்வாய்களை சீர மைப்பு செய்யவும், கால்வாய் பராமரிப்பு பணிகளுக்காகவும் பொதுப்பணித்துறை சார்பில் உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண் டும். மேலும், கோடை காலத்தில் வள்ளிம துரை வரட்டாறு அணையில் பாசனத்திற் காக தண்ணீர் திறக்க ஏதுவாக ஏரிகள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு செல்லும் கால்வாய்களை தூய்மைபடுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.