தருமபுரி, நவ.23- மின்சார சட்டதிருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் நடை பெறும் போராட்டத்திற்கு ஆதரவாக சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி, ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மின்சார சட்டத்திருத்த மசோதா 2022 ஐ கைவிடக் கோரி அகில இந்திய மின் ஊழியர் பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் தில்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பி.ஜீவா, மாவட்ட செயலாளர் தீ.லெனின் மகேந்திரன் பொருளாளர் சீனிவாசன், மாவட்ட இணைச்செயலாளர் கே.ஜெகநாதன், எம்காளியப்பன்,ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர்.
ஈரோடு
ஈரோடு மின்பகிர்மான வட்டத்தில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஈரோடு மண்டல சிஐடியு தலைவர் சி.ஜோதிமணி தலைமை வகித்தார். பொறி யாளர் சங்க செயலாளர் திருநீலகண்டன், தொழிலாளர் சம்மேளனம் அய்யாசாமி, எம்ப்ளாயீஸ் பெடரேசன் அம்மாசை, ஐஎன்டியுசி சிவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளான அலுவலர்களும், பொறியாளர்களும், தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.