அவிநாசி, ஜன.10- சேவூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல், வன்கொடுமை களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற் றது. அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் காவல் ஆய்வாளர் சரஸ்வதி கலந்து கொண்டு பேசுகையில், 18வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள், “போக்சோ” சட்டம் குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டும். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் கொடுக்கும் புகார்கள் ரகசியம் காக்கப்படும். பாலியல் குற்றம் சார்ந்த புகார்களை, இருந்த இடத்தில் இருந்தே அவர்கள் தெரிவிக்கலாம். அதேபோல், பெண்கள் பணிபுரியும் இடத்தில் சிலர் அவர் களை தவறான முறையில் தொட்டுப் பேசுவது, பாலியல் ரீதியாக சைகை செய்வது, அதிகாரத்தை வைத்து மிரட்டு வது, பாலியல் ரீதியான வார்த்தைகளை பேசுவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது உள்ளிட்ட புகார்களை காவல்துறை யினரிடம் தைரியமாக தெரிவிக்க வேண்டும். மேலும், பெண் கள், மாணவிகள் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரும் போது உடனடியாக 181 என்ற இலவச அலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.