பொள்ளாச்சி - ஏப்-26 ஆனைமலை அடுத்த டாப்சிலிப் வனப்பகுதியில் கடுமை யான வறட்சியால் உணவு மற்றும் தண்ணீர் இன்றி சுற்றுலாப் பயணிகள் தூக்கி எறியும் ககிதங்களை மான்கள் உண்ணும் பரி தாப நிலை ஏற்பட்டுள்ளது. ஆனைமலையை அடுத்த புலிகள் காப்பகத்தில் பாதுகாக் கப்பட்ட வனவிலங்குகளான மான், வரையாடு, சிங்கவால் குரங்கு, புலி, உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்கின்றன. தற் போது கோடை காலம் என்பதால் டாப்சிலிப் பகுதியில் கடு மையான வறட்சி ஏற்பட்டுள்ளது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெயில் வாட்டி வருவதால் வனப்பகுதியின் உள்ள குட்டை. குளம். ஓடைகள். உள்ளிட்டவை வறண்டு காணப்படுகின்றன. இத னால் வனத்தில் வாழும் உயிரினங்கள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. மேலும் வனவிலங்கு கள் உணவு மற்றும் தண்ணீரை தேடி மலைவாழ் மக்கள் வாழ்விடங்களிலும், பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளி லும் சுற்றி வருகிறது குறிப்பாக இங்கு அதிக அளவில் வாழும் புள்ளி மான்கள் சுற்றுலாப் பயணிகள் வீசி செல்லும் மீதமான உணவுகள், பேப் பர் கழிவுகள் உள்ளிட்டவைகளை உண்ணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் வனப்பகு திக்குள் தற்காலிக குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உரிய இடைவெளியில் சீராக தண்ணீர் வழங்கப்படுவ தில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது கடும் வறட்சி மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக அணைக்கட்டு கள் வறண்டு காணப்படுகின்றன. மேலும் சுற்றுலாப் பயணிக ளின் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரின்றி வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாய மும் உள்ளது. இதனை வனத்துறையினர் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளின் உயிரை காக்க வேண்டும். மேலும், ஆனைமலை புலிகள் காப்பகம் 956 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளது. வனப்பகுதியில் இருக்கும் தண்ணீர் தொட்டிகளில் கோடை வெயில் அதிகம் உள்ள நிலையில் வனவிலங்குகளுக்கு நீர் ஊற்றாமல் வனத்துறை அதிகாரிகள் அலட்சியப் போக்கில் செயல்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.