திருப்பூர், ஆக. 3 - திருப்பூர் பின்னலாடை தயாரிப்புக்குப் பயன்படும் பருத்தி நூல் விலையை மாதந் தோறும் முதல் தேதியில் அறிவிக்கும் நடை முறையைக் கைவிட நூற்பாலைகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள் ளது. பின்னலாடை உற்பத்திக்கு மூலப்பொரு ளாக பயன்படும் பருத்தி நூல் விலையை முன் னணி நூற்பாலைகள் மாதந்தோறும் அறி வித்து வருகின்றன. ஏற்றுமதி உற்பத்தியில் ஈடுபடும் சிறு, நடுத்தர பின்னலாடை நிறு வனங்கள் ஆர்டர்களை ஏற்று உற்பத்தி நட வடிக்கையைத் தொடங்குவதற்கு முன்பாக நூல் விலை அறிவிப்பை கூர்ந்து கவனித்து வருவது வழக்கம். நூல் விலை ஏற்ற இறக்கத் துக்கு ஏற்ப ஆர்டர்களை உறுதி செய்வார் கள். எனினும் கடந்த சில ஆண்டுகளாக நூல் விலை சீராக இல்லாமல் தாறுமாறாக இருந்து வருகின்றன. கடந்த 2022ஆம் ஆண்டு நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு எகிறி யது. இதன் விளைவாக சிறு, குறு பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் நிலைகுலைந்து போயின. ஏராளமான நிறுவனங்கள் மூடப் பட்டன. திருப்பூர் பின்னலாடை தொழில் துறையே கடும் நெருக்கடி நிலைக்குள் தள் ளப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 2023 ஜனவரி மாதம் முதல் நூல் விலை குறையத் தொடங்கியது. நூல் விலை குறைந்தாலும் பின்னலாடை உற்பத்தி ஏற்றம் பெறவில்லை. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், அமெ ரிக்க நாடுகளில் பொருளாதார நெருக்கடி இருக்கும் நிலையில் ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்து போய், உற்பத்தி சுருங்கி விட் டது. அது மட்டுமின்றி உள்நாட்டு சந்தையி லும் மக்களின் வாங்கும் சக்தி கடுமையாக குறைந்து போயிருக்கிறது. இதனால் உள் நாட்டு பின்னலாடை உற்பத்தியும் சரிவைச் சந் தித்து வருகிறது. உற்பத்தியில் இந்த நிலை நீடிப்பது மட்டுமின்றி, வங்கதேசத்தில் இருந்து வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் அடிப் படையில் பின்னலாடைகள் மட்டுமின்றி துணி களும் இந்திய சந்தைக்குள் வருவது அதிக ரித்துள்ளது.
இது போன்ற பல்வேறு காரணங்களால் பிரதானமாக திருப்பூர் பின்னலாடைத் தொழில் நெருக்கடி நிலையில் உள்ளது. இதன் காரணமாக, நூல் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும் உற்பத்தியாளர்கள் தரப் பில் நூல் வாங்குவது அதிகரிக்கவில்லை. பல முன்னணி நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பல ரக நூல்களும் பெரும ளவு தேங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரா உள்பட பல் வேறு மாநிலங்களிலும் உள்ள நூற்பாலை கள் தற்போது சிரமத்தைச் சந்தித்து வருகின் றன. உற்பத்தி செய்த நூல்களை விற்க முடிய வில்லை என்பதால் தொடர்ந்து உற்பத்தி செய் வதிலும் இழப்பு ஏற்படும் என்று அஞ்சுகின்ற னர். சில பகுதிகளில் நூற்பாலைகள் உற் பத்தியை நிறுத்தி விட்டனர். அதே சமயம் அடுத்த பருத்தி ஆண்டு செப்டம்பர் முடிந்து அக்டோபரில் தொடங்கும் என்பதால், சர்வ தேச பருத்திச் சந்தையில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், ஊக வணிக அடிப்படையில் பஞ்சு, நூல் விலையைத் தீர்மானிக்கக்கூடிய நிலை உள்ளது. எனவே திருப்பூரைப் பொறுத்தவரை நூல் சப்ளை செய்வதில் பிரதான பங்கு வகிக் கும் எஸ்எஸ்எம் நிறுவனம் மாதம் ஒரு முறை விலை நிர்ணயிக்கும் முறையை கைவிடப் போவதாக அறிவித்துள்ளது. சந்தையின் தன் மைக்கு ஏற்ப நூல் விலையை அவ்வப்போது தீர்மானிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்ற கருத்தை தொழில் துறையினர் மத்தி யில் சமூக ஊடகங்கள் வழியாக வெளிப்ப டுத்தி உள்ளது.
ஒருபுறும் நூல் விலை குறிப்பிட்ட காலத் திற்காவது சீராக இருக்க வேண்டும் என்று பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரி வரு கின்றனர். ஆனால் நூற்பாலை தரப்பினர் தங்களது சூழ்நிலையில் இருந்து சந்தைக்கு ஏற்ப விலையை நிர்ணயிப்பதைப் பற்றி பேசி வருகின்றனர். இது இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடான நிலையாக உள் ளது. தற்போதைக்கு உடனடி பாதிப்பு ஏதும் இல்லாவிட்டாலும், நூற்பாலை தரப்பின ரின் அறிவிப்பை பின்னலாடை உற்பத்தியா ளர்கள் விரும்பவில்லை. மொத்தத்தில் ஒட்டுமொத்த ஜவுளித் துறை நெருக்கடியின் ஒரு விளைவாகவே நூற்பாலைகளின் அறிவிப்பையும் காண வேண்டியுள்ளது. ஆனால் அது மீண்டும் ஒட் டுமொத்த ஜவுளித் துறையின் நெருக்க டியை அதிகரிக்கவே வழிவகை செய்யும். ஒன்றிய அரசு விலைக் கொள்கையைப் பொறுத்தவரை அரசு அல்லது அந்த தொழில் சார்ந்த குழுவினர் மூலம் விலைக் கட்டுப் பாடு, விலை நிலைத்தன்மை என்பதை ஏற்ப தில்லை. சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப விலை தீர்மானிக்கப்பட வேண்டும் என் பது ஒன்றிய அரசின் நிலைபாடாக உள்ளது. இதனால்தான் நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தபோதும், தொழில் துறை யினர் நூல் விலையைக் கட்டுப்படுத்த ஒன் றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திய போதும், அரசு தலையிடவில்லை.
எந்த தொழிலாக இருந்தாலும் மூலப் பொருட்கள், உப பொருட்கள் விலை குறிப் பிட்ட காலத்திற்காவது சீராக, நிலையாக இருப்பதுதான் அந்த தொழில் துறையின் அனைத்து நிலையில் இருப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும். சந்தை சக்திகள் விலையைத் தீர்மானிப்பது என்ற முடிவு அம லாக்கப்படும்போது அது பெரும்பாலும் கார்ப்பரேட், மிகப்பெரும் நிறுவனங்கள், மிகப்பெரும் வணிக நிறுவனங்களின் கட்டுப் பாட்டில் ஒட்டுமொத்த தொழில் துறையின ரும் சிக்கிக் கொள்ளக்கூடியதாக போய்வி டும். இது தான் கடந்த காலத்தின் அனுபவமாக உள்ளது. தற்போதைய நெருக்கடி காலத் தில், சந்தை நிலைக்கு ஏற்ப விலையைத் தீர் மானிக்கலாம் என்று நூற்பாலைகள் சொல் வது அவர்களுக்கு உடனடி சூழ்நிலைக்கு உகந்ததாக இருக்கலாம். ஆனால் தொலை நோக்கு அடிப்படையில் இந்த விலைக் கொள்கை அவர்களையும் கடுமையாக, நீடித்த முறையில் பாதிக்கும். ஒன்றிய அரசின் நிலைபாடு கார்ப்பரேட் டுகளுக்கு சாதகமாக இருப்பதற்கு மாற்றான முறையில் விலைக் கொள்கையில் நிலைத்த, சீரான விலையை நடைமுறைப்படுத்துவதே சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையின ருக்கு பாதுகாப்பளிக்கும்.