உதகமண்டலம், மே 14-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நீலகிரி மாவட்ட முன்னணி தலைவர்களில் ஒருவராக பணியாற்றி, அண்மையில் உடல் நலக்குறைவால் மறைந்த தோழர் எல்.தியாகராஜன் படத்திறப்பு நிகழ்ச்சி உதகையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரிதலைமை தாங்கினார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தர ராசன் பங்கேற்று எல்.தியாகராஜன் அவர்களின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.தமிழகத்தின் மிக முக்கிய பொதுத் துறைநிறுவனமான ஹிந்துஸ் தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற் சாலையை பாதுகாக்கும் போராட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவதில்,கேத்தி காளான் தொழிற்சாலையில் நடைபெற்ற நூறு நாட்கள் போராட் டத்தில் என நீலகிரி மாவட்டத்தின் அனைத்து இயக்கங்களிலும் முன்னணி பாத்திரத்தை வகித்தவர் தோழர் தியாகராஜன் எனப்புகழஞ்சலி செலுத்திய அ.சவுத்தரராசன், சிஐடியுமாவட்டச் செயலாளராக, மாநிலக் குழு உறுப்பினராக, கட்சியின் மாவட்டசெயலாளராக என பல பொறுப்பு களில் எல்.தியாகராஜன் பணியாற்றி யிருக்கிறார். பல்வேறு பகுதி தொழிலாளர்களை ஸ்தாபனமாக அணி திரட்டுவதிலும் அவரின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாகும். “இன்றைக்கு தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு, தொழிற்சாலைகளின் மாசு ஏற்படுத்தும் சுற்றுச் சூழல் அபாயங்களிலிருந்து மக்களை பாதுகாத்திடவும் தொழிற் சங்கங்கள் உரிய முயற்சிகளை மேற்கொள்ளவும், அதற்கான முறையில் பொருத்தமான கோரிக்கை களையும் முன்வைக்கும் சூழல் உள்ளது. அதுதான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் அனுபவம் நமக்கு சொல்லும் பாடம். இன்றைக்கு போராடிப் பெற்ற உரிமைகளை தொழிலாளி வர்க்கம் இழந்து கொண்டு வருகிறது. ஆட்சியாளர்கள் தொடுக்கும் தாக்குதல்களை எதிர் கொள்ள தொழிலாளி வர்க்கத்தை அரசியலாக பயிற்றுவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அந்த பணி களை நாம் தொடர்ச்சியாக சலிப் படையாமல் மேற்கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுகளின் தனித்துவமான பங்களிப்பு என்பது அதுதான். நாம் உயிரோடு இருக்கும் வரை மேற்கொள்ளும் உணர்வுப் பூர்வமான முயற்சிகளே மரணத்திற்கு பின்பும் நம்மை நினைவு கூர வைக்கும். அந்த வகையில் மரணமில்லா பெருவாழ்வு கம்யூனிஸ்டுகளுக்கே சொந்த மானது” என்றும் அ.சவுந்தரராசன் கூறினார்.நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டசெயற்குழு உறுப்பினர் என்.வாசு, மாவட்டக்குழு உறுப்பினர் வி.வி.கிரி ஆகியோர் உரையாற்றினர். தோழர் எல்.தியாகராஜன் அவர் களின் துணைவியார் ராஜேஷ்வரி, மகன் திருமுருகன், மருமகன் காமாட்சி சுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். எல்.தியாகராஜன் அவரது துணைவியார் ராஜேஷ்வரிக்கு அ.சவுந்தரராசன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ஆல்தொரை வர வேற்புரையாற்றினார். உதகை தாலுகா செயலாளர் எல்.சங்கரலிங்கம் நன்றி கூறினார். படத்திறப்பு நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதுமிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிஐடியு செய்திஆண்டுச்சந்தாக்களை அ.சவுந்தர ராசனிடம், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.