கோபி, ஜன.5- ஆதிதிராவிட நலத்துறையால் வழங்கப்பட்ட 71 பட்டாகளுக்கு பட்டா மாறுதல், பெயர் மாற்றம் செய்ய இடைக்கால தடையை நீக்கி, ஆணை வழங்கிய கோட்டாட்சியருக்கு தலித் மக்கள் நன்றி தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம், சத்தி அருகே உள்ள அங்கணகவுண்டன்புதூர் பெரியார்நகரில் கடந்த 35ஆண்டுக ளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் 70க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டி ருந்தது. இந்நிலையில், வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டவர்களின் வாரி சுதார்கள் பட்டா மாறுதல், பெயர் மாற்றம் செய்ய சத்தி பத்திரபதிவு துறை அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்தபோது பட்டா நிலத் திற்குட்பட்ட பகுதி வக்பு வாரியத்திற் குட்பட்ட பகுதியாக உள்ளதாகவும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் பத்திர பதிவு செய்ய கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பாதிப்பிற்குள் ளான பெரியார்நகர் மக்கள் கோபி கோட்டாச்சியர் அலுவலகத்தில் காத் திருப்பு போராட்டம் உள்ளிட்ட பல் வேறு கட்ட போராட்டங்களை நடத்தி னர். மேலும், கோட்டாச்சியர் அலுவ லகத்தில் மனுவும் அளித்திருந்தனர். இந்நிலையில், இம்மனுக்கள் மீது கோட்டாச்சியர் திவ்யபிரியதர்ஷினி தலைமையில் வருவாய்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும், வக்பு வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று பெரியார் நகரில் ஆதிதிரா விட நலத்துறை வழங்கப்பட்ட 71 பட்டாக்களுக்கு பட்டா மாறுதல், பெயர் மாற்றம் செய்ய இடைக்கால தடையை நீக்கி அனுமதி பெற்று அதற்கான ஆணை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அங்கண கவுண்டன்புதூர் பெரியார்நகர் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் கோபி கோட்டாச்சியர் திவ்யபிரிய தர்ஷினிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ரங்க சாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் பாண்டி யன், அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்க தலைவர் விஆர்.மாணிக் கம் தலைமையில் கோட்டாச்சியர் திவ்யபிரியதர்ஷினியை நேரில் சந் தித்து அப்பகுதி மக்கள் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.