கோவை, பிப்.23- பெரியநாயக்கன்பாளையத்தில் நடை பெறும் மேம்பாலப்பணிகள் ஆமை வேகத் தில் நடைபெறுவதால், மாற்றுப்பாதையில் செல்லும் வாகனங்கள் போதிய சாலை வசதி இல்லாததால் நாள் தோறும் விபத்து ஏற் படுவது வாடிக்கையாக உள்ளது. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன் பாளையத்தில் ராம கிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமி செட்டிபாளையம் பிரிவு வரை 1.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.85 கோடி மதிப் பில் மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமி செட்டிபாளையம் வரை தூண்கள் அமைக் கப்பட்டுள்ளது. இந்த தூண்களுக்கு இடையே காங்கீரிட் ஓடுதளம் அமைக்கும் பணிகள் பல மாதங்களாக ஆமை வேகத் தில் நடந்து வருகிறது. கோவை - மேட்டுப் பாளையம் சாலை உதகை, மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல முக்கியமான தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். இதனிடையே, மேம்பால பணிகளை விரைவாக மேற்கொள்ள வாகனங்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட் டுள்ளன. இந்த மாற்றுவழி பாதையும் இச் சாலையில் செல்வதற்கு ஏதுவான சாலை கள் அல்லாமல் குடியிருப்களுக்கு நுழைந்து செல்லும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போதி முன் ஏற்பாடுகள் செய்யப்படாமல், வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால் விபத்துகள் அதிகரித்துள்ளது. நாள் தோறும் இப்பகுதியில் விபத்து ஏற்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது. மேலும், மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தாமதம் ஆவதால் கோவை - மேட்டுப்பாளையம் செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்து கள், மாற்றுப்பாதைகளில் ஒரு வழிப்பாதை வழியாக செல்வது அதிகரித்துள்ளது.
குறிப்பாக, எல்எம்டபிள்யூ வழியாக ஒரு வழிப்பாதையில் பேருந்துகள் அத்து மீறி செல்கிறது. இதனால் விபத்துகள் அதிக ரிக்கிறது. வாகன ஒட்டிகள் உயிரை கையில் பிடித்து செல்லும் நிலையே உள்ளது. இந் நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி எல்.எம்.டபிள்யூ அருகே ஒரு வழிப்பாதையில் வந்த பேருந்து கட்டுப் பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கடைகளுக்கு அருகில் உள்ள சுவற்றில் மோதி நின்றது. நல்வாய்பாக கடைகளுக் குள் புகாமல் இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்துக்குள் இருந்த வர்களில் சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, பெரியநாயக்கன் பாளையம் மேம் பால பணிகள் தொடர்ந்து மந்தமாக நடை பெற்று வருகிறது. மாற்றுப்பாதைகளில் பல இடங்களில் சாலை முற்றிலும் சேதமடைந் துள்ளன. சில இடங்களில் மட்டுமே புதிய தாக சாலை அமைக்கப்பட்டுள்ளன. அறிவிப்பு பலகைகள் இல்லை. இரவு நேரங் களில் மேம்பாலத்தை ஒட்டியே செல்லும் சாலைகள் முழுவதுமாக சேதம் அடைந் துள்ளன. அப்பகுதிகளில் சாலை அமைக்கப் படாமல் உள்ளதால் புழுதி காற்று பறக்கிறது. உடனடியாக சாலைகளை சீரமைத்து தர வேண்டும். உடனடியாக மேம்பால பணி களை விரைவுப்படுத்த வேண்டும் என் றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப் படுத்த பணியில் உள்ளனர். அவர்கள் அங்கு இல்லாத நேரம் இது போன்று நடந்துள்ளது. அரசு பேருந்து ஒரு வழிப்பாதையில் சரி யாக வந்தது. எதிரில் வாகனங்களால் நிலை தடுமாறியுள்ளது என்றனர்.