உடுமலை, டிச.2- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உடுமலை கிளை சார்பில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் சனியன்று தோழன் ராசா எழுதிய அப்பாவின் தோழர்கள் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் உடுமலை கிளைத்தலைவர் சுதா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கிளைச் செயலாளர் துரையரசன் வரவேற்று பேசினார். அப்பாவின் தோழர்கள் புத்த கத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் உடுமலை தலைவர் செல்லத்துரை வெளியிட்டார். வெற்றி இரா.முருகநா தன் பெற்றுக்கொண்டார். இப்புத்த கத்தை அறிமுகம் செய்து வைத்து மு. காமராஜ் பேசினார். இந்நிகழ்ச்சியில் அரசு ஊழியர் சங் கத்தின் மாவட்டச் செயலாளர் பாலசுப்பி ரமணியன், நூலகர் பீர்பாஷா, நூலகர் வாசகர் வட்டத்தின் சண்முகசுந்தரம், வானவில் பதிப்பாசிரியர் பன்னீர்செல் வம், உடுமலை பத்திரிகையாளர் சங்கத் தின் தலைவர் ராஜமாணிக்கம் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். பின்னர் புத்தக ஆசிரியர் தோழன் ராசா ஏற்புரை வழங்கி னார். முடிவில் விவசாய பாரதி நன்றி கூறி னார்.