districts

img

ஒரு கையில் சிலம்பம் சுற்றியபடி 50 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம்

ஒரு கையில் சிலம்பம் சுற்றியபடி 50 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம்  மே.பாளையம், பிப்.13- சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு மாதத்தை ஒட்டி, 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு கையில் சிலம்பம் சுழற்றியபடி சைக்கிள் ஓட்டி சென்ற அரசு பேருந்து நடத்து நரின் செயல் அனைத்து தரப்பு மக்க ளையும் கவர்ந்தது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாது காப்பு மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 15 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை கொண்டாடப்படும். அந்த வகையில், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி வாகன பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகி றது. இதன் ஒரு பகுதியாக, சாலை விதிகளை பின்பற்ற வேண் டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில், மேட்டுப்பாளையம் அரசு பேருந்து நடத்துநரான அறிவழகன் என்பவர், சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு கையில் சிலம்பம் சுழற்றிக்கொண்டு, மறு கையில்  சைக்கிள் ஓட்டியபடி விழிப்புணர்வு செய்தார். சிறுமுகை சாலையில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பய ணம் மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளை யம், துடியலூர் வழியாக கோவை அரசு தலைமை போக்கு வரத்து கழக அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்த விழிப்பு ணர்வு நிகழ்வை, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் துவக்கி வைத்தார். 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு சைக்கி ளில் பயணம் செய்யும் அரசு பேருந்து நடத்துனர் அறிவழக னின் செயல், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.