தருமபுரி, பிப்.20- தருமபுரியில் சாகுபடி நிலத்திலிருந்த தென்னை மரங்களை வெட்டி சாய்த்தவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. தருமபுரி நகரம், வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அருகே உள்ள கேசிகே நக ரைச் சேர்ந்தவர் ரா.ஜோதிபாசு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளராக உள்ள இவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலம் குள்ளனூர் பனந்தோப்பில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகாலமாக 6 தலைமுறை யாக விவசாய சாகுபடி செய்து வருகின்ற னர். இவரது நிலத்தில் வாய்கால் உள்ளது. அதனருகில் இவரது குடும்பத்திற்கு சொந்த மான நிலம் உள்ளது. அந்த நிலத்தில் 10க்கும் மேற்பட்ட தென்னைமரங்கள் உள் ளன. இந்நிலத்தின் அருகே உள்ள டி.சி.சர வணன் என்பவர், வேலி அமைப்பதற்காக ஆட்களுடன் வந்தார். ஜோதிபாசு குடும்பத் திற்கு சொந்தமான நிலத்தில் வாய்க்கால், தென்னைமரமும் சேர்த்து கிரையம் செய்து விட்டதாக கூறினார். இந்நிலையில், வியாழ னன்று சரவணன் 30க்கும் மேற்பட்ட ஆட்களு டன் மரம் அறுக்கும் 10 இயந்திரத்துடன் நிலத் திற்கு வந்து, யாருமில்லாத நேரத்தில் ஜோதி பாசு குடும்பத்திற்கு சொந்தமான தென்னை மரங்களை அறுத்து சாய்த்துவிட்டனர். எனவே, தனக்கு சொந்தமான நிலத்திலி ருந்த 10 தென்னைமரங்களை வெட்டி சாய்த்த, நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக் குமாறு ஜோதிபாசு தருமபுரி காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதன்பேரில் தருமபுரி நகர காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகராசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.கிரைஸா மேரி, கே.பூபதி, மாதர் சங்க மாவட்டத் தலை வர் ஏ.ஜெயா, நகரச் செயலாளர் எஸ்.நிர்மலா ராணி உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். பல ஆண்டு காலமாக இருந்த தென்னை மரங்களை வெட்டி சாய்த்த மேற் ்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இழப்பீடு வழங்க வேண்டும், என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.