ஈரோடு, ஏப்.16- தொடர் விடுமுறையை யொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் குவிந்தனர். ஏப்.14ஆம் தேதி தமிழ் புத் தாண்டு தினத்தையொட்டி விடு முறையாகும். மேலும் சனி, ஞாயிறு தினங்கள் விடுமுறையாகும். எனவே, சுற்றுலா தலங்களில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் அருகே பவானிசாகர் அணை உள்ளது. அதன் அருகே பூங்கா உள்ளது. இப்பூங்காவுக்கு சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மட்டுமின்றி மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், ஞாயிறன்று பவானிசாகர் அணை பூங்கா வுக்கு ஏராளமான சுற்றுலா பயணி கள் வந்தனர். பூங்காவுக்கு தங்கள் குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் அங்கு ஊஞ்சல் விளையாடியும், சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண் கள் சறுக்கு விளையாடி மகிழ்ந் தனர். இதனால் காலை முதலே அணை பகுதியில் எங்கு பார்த் தாலும் மக்கள் கூட்டமாக காணப் பட்டனர். மேலும் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது.. இதேபோல், கோபிசெட்டி பாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணைக்கு மக்கள் அதிகள வில் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கு கொட்டும் தண் ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இத னால் கொடிவேரி தடுப்பணை பகுதி யில் ஞாயிறன்று மக்கள் கூட்டம் அலை மோதியது. மேலும், ஈரோடு வ.உ.சி. பூங்கா வில் ஞாயிறன்று காலை மக்கள் குறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்ல செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்பட மாவட்டத்தின் உள்ள அனைத்து சுற்றுலா தலங் களிலும் கடந்த 3 நாட்களாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டன.