districts

img

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மண்டல அலுவலகத்தில் சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர், ஆக.23 - திருப்பூர் மாநகராட்சி 7 மற்றும்  8 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதி களில் சாலை, கழிவுநீர் கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி வெள் ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 2ஆம் மண்டல அலுவல கத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் குருவாயூரப்பன் நகர் கிளைச்  செயலாளர் செல்வகுமார், சக்திநகர்  கிளைச் செயலாளர் ரமேஷ், மாதர்  கிளைச் செயலாளர் கற்பகம் ஆகி யோர் தலைமையில் வெள்ளியன்று  இரண்டாம் மண்டல அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறுகையில்,  7ஆவது  வார்டுக்கு உட்பட்ட குருவாயூரப்பன் நகர் வடக்குப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் முன் வீதியில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் இடுப்பளவு தேங்கி நிற்கிறது. 6 ஆவது வீதியில் மின் விளக்குகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமத் திற்கு உள்ளாகின்றனர்.போயம்பா ளையத்தில் உள்ள கான்கிரீட் சாலை யைத் தோண்டி ஒன்றரை ஆண்டு களாக மூடப்படாமல் உள்ளது. சக்தி  மாரியம்மன் கோவில் முன் சாக்கடை  தண்ணீர் வருவதால் துர்நாற்றம் வீசு கிறது. 8ஆவது வார்டுக்கு உட்பட்ட கங்கா நகர் முதல் வெங்கமேடு வரை யிலான சாலை குண்டும், குழியு மாக உள்ளது. அதேபோல் மும்மூர்த்தி நகர்  முதல் ஏகேஆர் சாலையும் படுமோச மாக உள்ளது. பல இடங்களில் குழாய்கள் உடைந்துள்ளது. தெரு விளக்கு சரியாக எரிவதில்லை. நந்தா நகரில் உள்ள மின்கம்பம் பழுத டைந்து கீழே விழும் நிலையில் உள் ளது. சாலைகளை சீரமைத்து தரு வது, புதிய தெருவிளக்குகள் அமைப் பது, குப்பைத்தொட்டி வைத்து குப் பைகளை முறையாக அப்புறப்ப டுத்த ஆட்களை நியமிக்க வேண்டும்.  5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண் டும். புதிதாக சாக்கடை கால்வாய்  வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை சரி செய்து தரக் கோரி காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக தெரிவித் தனர். இதையடுத்து, இரண்டாம் மண் டலத் தலைவர் தம்பி கோவிந்தராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் சம்பந்தப்பட்ட அதி காரிகள் சீரமைக்கப்பட வேண்டிய  சாலைகள், கழிவுநீர் கால்வாய் உள் ளிட்டவைகளை இன்றே (வெள்ளி யன்று) ஆய்வு மேற்கொள்வதாக வும், உரிய காலத்திற்குள் அனைத்து  பிரச்சனைகளையும் சரி செய்து தரு வதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து காத்திருப்பு போராட்டம் முடிவடைந்தது.  இந்த பேச்சுவார்த்தையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு  ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப் பன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆ. சிகாமணி, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் பாண்டியன், மகாலிங்கம், தன்ராஜ் உட்பட கிளைச் செயலாளர்  பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.