நாமக்கல், செப்.17- கந்துவட்டி, வார வட்டி, மீட்டர் வட்டி என விசைத்தறி தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப் படுகிற நிலையில், கந்து வட்டிக் கெதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் சார் பில் வருகிற ஞாயிறன்று பள்ளிபா ளையத்தில் சிறப்பு மாநாடு நடை பெறுகிறது. இதன் முக்கியத்து வத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சி யினர் வீடுவீடாக துண்டு பிரசுர விநி யோகத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபா ளையம் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் கந்து வட்டி நிறுவனங்களின் அடாவடிப்போக்கு அதிகரித்து வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களில் கடன் பெற்ற வர்களை அந்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் கடும் நெருக்கடி கொடுக்கிறார்கள். இதன் காரண மாக ஏழை எளிய விசைத்தறி தொழி லாளர் குடும்பங்கள் பாதிப்பை சந் தித்து வருகிறது. தொடர் அச்சுறுத் தல் காரணமாக விசைத்தறி தொழி லாளர்கள் தற்கொலை செய்து கொள் ளும் நிகழ்வும், உடல் உறுப்புகளை விற்று கடனை அடைக்கும் செய லும் அதிகரித்து வருகிறது. இத னால் தேசிய மயமாக்கப்பட்ட மற் றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் மக் களின் தேவைக்கு குறைவான வட்டியில் கடன் பெற்று தொழில் செய்திட ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அத்துமீறும் மைக்ரோ பைனான்ஸ், கந்துவட்டி நிறுவனங் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கட்சி, பள்ளிபாளையத்தில் சிறப்பு மாநாட்டை நடத்த உள் ளது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், மார்க்சிஸ்ட் கட்சியினர், செவ்வாயன்று கொக்கராயன் பேட்டை, ஆவரங்காடு, ஓடப் பள்ளி, காவேரி ஆர்.எஸ். என ஒன் றியப் பகுதி முழுவதும் துண்டு பிரசுரம் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பெருமாள், எம்.அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இ. கோவிந்தராஜ், ஆர்.ரவி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.